COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, February 18, 2010

நனைத்தெடுக்கும் நினைவுகள்

மழை போடும் கோலங்களாய்

நில்லாமல் நினைவலைகள்.

நெஞ்சிடுக்கினிலும்

நனைந்து போகும்.

இங்கும் அங்குமாய்

நனைந்த குருவியாய்

என் உள்ளம்.

இடியும் மின்னலும்

மறைக்கும் டிவி சப்தம் போல்

ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்.

நினைவுத் திவலைகள்

கண்களுக்குள் ஒளிந்து கொண்டு.


கைகால் நடுங்க‌

உள்ளம் பதற‌

ஓயாத மழைக் காதலோடு


இன்னும் நனைகிறேன்.


நினைவலைகளில்.

No comments: