COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, September 14, 2013

எல்லாமே மென்பூக்கள்....


வார்த்தைகளில் சிக்கியே
காணாமல் போகின்றன...
வார்த்தைகள்.

காரின் வேகத்தில் பின்வாங்கும்
சாலையோரச் செடிகளின் பூக்களில்,
நில்லாமல் தாவிச் செல்லும்
பட்டாம்பூச்சியோடு
பின்தங்கி  நின்றுவிட்டது மனம்.

தொட்டாற்சுருங்கி என்று தெரிந்ததும்,
மிதித்துச் சுருங்குவதைச்
சரிபார்க்கும் கோழைமனம்.

இருந்த சுவடு தெரியாமல்,
கட்டிய கோலம் காணாமல்,
இன்றைய இருப்புக்கு மட்டுமே அடையாளமாய்.
மேகங்களைப் போலாகி விட்டது
வாழ்க்கை.

Saturday, February 11, 2012

கடவுள் அமைத்து வைத்த மேடை

[உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் எழுதியது]

நீலிமாவுக்கு வருத்தமாய் இருந்தது. ஆனந்த் இன்றும் வீட்டுக்கு வரப்போவதில்லை. அவனுக்காக நேற்று செய்து வைத்திருந்த இரவு-உணவை யும் காலையில் கொட்டியாயிற்று. வீட்டு நாய் மிஸ்டர்ஸ்பாட்ஸ்க்கு இந்திய உணவு பிடிக்காது. அதற்கு வேண்டிய உணவை எடுத்து வைத்துவிட்டு நீலிமா ஆனந்துக்காகக் காத்திருந்தாள்.

சனிக்கிழமை முழுக்க வீட்டுக்கு வராதவன், ஞாயிறன்று (நேற்று) மாலை வீட்டுக்கு வந்தவன், "எப்போ டிசைட் பண்ணுவ?" என்றான்.

"சாப்பிடலியா, ரொட்டியும் கடியும் சோறும் செய்து வைத்திருக்கிறேன்" என்றாள் நீலிமா.

"சீ. விவாகரத்து வேணும்னு கேட்டேன் வெள்ளிக்கிழமை. ஒரு எமர்ஜென்ஸி ஹாண்டில் செய்வதற்காக மருத்துவமனை போயிட்டு, அப்பிடியே லிசா அபார்ட்மெண்ட் போனேன்... உன்னோடு எனக்கு கணவன்மனைவி உறவு எல்லாம் முடிஞ்சு வருஷக்கணக்கு ஆயிடுச்சி" என்றான் ஆனந்த்.

"எனக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லீங்க" என்றாள்.

அது தானே உண்மையும் கூட. என்ன செய்வது, எங்கே போவது? தோழிகள் என்று யார் இருக்கிறார்கள்? அமெரிக்க உடமைகளில் தேவைப்பட்டதை எடுத்துக் கொண்டு இந்தியா கிளம்பி விடுவது எளிதா? இந்தியாவில் இருக்கும் அண்ணன், அண்ணி வரவேற்பு எப்படி இருக்குமென்று தெரியாதா ஆனந்துக்கு?

"புதன் கிழமைக்குள் காலி பண்ணு. வீடு க்ளீன் செய்ய லிசா யாரையாவது வெள்ளிக்கிழமை அனுப்புவாள்" ஆனந்த் நீலிமாவின் கண்களையே பார்க்காமல் சொன்னான்.

"ஏன் வீடு க்ளீனாத் தானே இருக்கு?" நீலிமாவுக்கு கண்ணீர் பெருகியது.

"சீ. சமையல் நாத்தம். லிசாவுக்கு இந்தியச் சமையலே பிடிக்காது. நீ கிளம்பும்போது பூஜையறை சாமானையும் எடுத்துக்கலாம். வேற என்ன பொருள் வேணும்னு லாயர்கிட்ட சொல்லிடு. ஹோண்டா ஆடிஸி, பர்னிச்சர், பாத்திரம் பண்டம், அலங்காரப்பொருள் எல்லாத்தையும் எடுத்துக்கலாம். ஜீவனாம்சம் மாசம் 3000$, உன் ஒருத்திக்கு இது நல்ல அமவுண்டு. சீக்கிரம் ஏற்றுக் கொண்டு கிளம்பு... மிஸ்டர்ஸ்பாட்ஸை நானே வைத்துக் கொள்வேன்". அவள் பதிலுக்கு காத்திராமல் ஆனந்த் கிளம்பி விட்டான்.

லிசாவுக்கு இந்தியச் சமையல் பிடிக்காது என்றால், ஆனந்துக்குப் பிடித்த மெந்திய ரொட்டியும், பருப்பும் யார் செய்து தருவார்கள்? நீலிமா செய்யும் கடி (மோர்க்குழம்பு) நன்றாக இருக்கிறது என்பானே? தான் சமையல்காரியாகவாவது இங்கேயே இருந்து விடலாமா? பூஜை செய்வது பிடிக்கலை என்றால், அதை கீழே அடித்தளமட்டம் (பேஸ்மெண்ட்) அறைக்குள் வைத்து அங்கேயே தானும் இருந்து கொள்ளலாம்.... மிஸ்டர்ஸ்பாட்ஸாவது, நீலிமாவின் பிரிவைத் தாங்காமல் அழாதா? இரவெல்லாம் தூங்காமல் அழுதுகொண்டிருந்தாள் நீலிமா.

காலை விடிந்ததும், பிள்ளை ஷ்ரேயஸுக்கு போன் செய்தாள்.

'மாம், இட்ஸ் செவென். ஐ காட் டு கோ டு வொர்க். ப்ளீஸ் மேக் இட் க்விக்'.

'அதைத்தான் உன் தந்தையும் சொல்கிறார். என்னை சீக்கிரம் வீட்டைக் காலி செய்யச் சொல்லி!' என்று எல்லா விவரங்களும் சொன்னாள் நீலிமா.

அதிர்ந்தானோ என்னவோ, ஷ்ரேயஸ் அதைக் காட்டவில்லை. 'அம்மா, அப்பாவின் ரசனைகள் வேறு. லிசாவுக்கு முன்னால் லிண்டா. லிசாவாவது நர்ஸ், அவரை வளைத்துப் போட்டு விட்டாள். லிண்டா இந்தியப் பெண், உன் தோழி. நீயும் சும்மா இருந்தாய். லிண்டாவுக்கு முன்னால் யாரோ? தெரிந்து கொண்டு சும்மாத் தானே இருந்தாய்? ஏதோ கெட்டது... சனி என்று சொல்வாயே, சனி விட்டது என்று நினைத்து விடு. வீட்டை நீ எடுத்துக் கொள்ளப் போகிறாயா? வீடு நல்ல லொக்கேஷன், பெரிய வீடு என்பதால் 1.5மில்லியன் வரை போகும். ஐ வுட் சே கோ டு அ லாயர்.'

'ரே, என்னடா பேச்சு இது உங்க அப்பாவைப் பத்தி? இந்த வீட்டைத் தாண்டி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அவருக்கு இந்த வீடு வேண்டுமாம். ஹோண்டா ஆடிஸி, வீட்டுல இருக்கிற சாமான் எல்லாத்தையும் எடுத்துக்க சொன்னார். மாசம் $3000 கொடுப்பாராம்.... மிஸ்டர்ஸ்பாட்ஸும் அவருக்கு வேண்டுமாம்'.

'மாம், எனக்கு இப்போ வயசு 24. 10வருஷத்துக்கு முன்னால அப்பா தப்பு பண்ணபோது கேட்கக்கூடாதுன்னு சொன்னே. திரும்பத்திரும்ப தப்பு பண்ணவிட்டுட்டு எதுக்கு இப்படி அடிமையா இருக்கே? சந்தோஷமா இரும்மா. பக்கத்திலே நல்ல அபார்ட்மெண்ட் பார்த்துக்கோ. உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்வாங்கன்னு நீ பயந்தாக்க, இந்தியா ட்ரிப் அடி. மனசுக்கு இதமா இருக்கும். இப்போ நான் வேலைக்குப் போகணும், மாலை 5மணிக்குத் வீட்டுக்கு வந்து பேசறேன். லாயர்கிட்ட போகறதைப் பத்திப் பேசறேன். ஸாரிம்மா. அண்ட் ஸாரி அபவுட் மிஸ்டர்ஸ்பாட்ஸ் டூ' போய் விட்டான்.

ஷ்ரேயஸிடம் பேசியதில் இருந்து மனம் இன்னும் கனத்தது. அப்பாவும் பிள்ளையும் 10வருடங்களாக நேருக்கு நேர் பேசுவது கிடையாது. ஆனந்த் செய்கிற பொம்பிளைப்பொறுக்கித்தனத்தை பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று பதின்ம வயதில் வீராப்பாக இருந்த ஷ்ரேயஸ், அப்பா பணத்தை வாரி இறைத்து மேல்படிப்பு படிக்க வைத்ததும் மௌனமாகி விட்டான்.

நீலிமா அழுது கொண்டே இருந்தாள். தோழிகள் எல்லாருக்குமே லிண்டா பற்றி தெரியும். லிண்டா வீடு வரை நட்பு பாராட்டியவள், பின் ஆனந்துக்கு காதல் லைன் போட்டாள். இல்லை, ஆனந்த் தான் அவளுக்கு லைன் போட்டானோ? என்னவோ ஏதோ, லிண்டாவின் கணவன் வந்து அடிதடியாகி லிண்டாவும் கணவனும் ஊரை விட்டுக் கிளம்பினார்கள்... அதற்குப்பிறகு தோழிகள் யாருமே அவளிடம் சரிவரப் பேசுவதில்லை. இப்போது ஆனந்துக்குத் தேவை, கூட வேலை செய்யும் வெள்ளைப்பெண் நர்ஸ் லிசா.

மதியம் இரண்டு மணியாகி பசிமீறிய தலைவலியோடு நீலிமா எழுந்தாள். தனக்கு என்று என்ன இருக்கிறது பாக் செய்ய? வேலைக்குப் போகாமல் இருந்ததால், நீலிமாவிடம் இருந்தவை விலைமலிவான அமெரிக்க ஆயத்த உடைகள்; நான்கு பார்ட்டி உடைகள், அதுவும் திருமணமான புதிதில் ஆனந்தோடு பார்ட்டிக்குச் செல்ல அணிந்தவை. மிச்சம் மீதி, ஆரவாரமான இந்திய நகைகள், அலங்காரம் நிறைந்த இந்திய உடைகள். கல்லூரிக்காலங்களில் எழுதிய பழைய கவிதை நோட்டுப்புத்தகம். "இட் இஸ் அ லூஸர்'ஸ் ஹாபிட்" என்று ஆனந்த் சொன்ன பிறகு கவிதை எழுதுவதும் நின்று போனது.

சமரசங்களில்
முதலில்
கொலையுண்டது
மனம்.

சாப்பிட விருப்பமே இல்லை. நீலிமா எல்லாத்துணிமணிகளையும் எடுத்து பாக் செய்தாள். பார்த்துப் பார்த்து இந்திய முறையில் அலங்கரித்த வீடு. என்ன செய்வது? முன்னறையில் குவித்த பர்னிச்சர், துணிமணி எல்லாவற்றிற்கும் "சால்வேஷன் ஆர்மிக்கு" என்று நோட் எழுதி அவர்களை அழைத்து வெள்ளியன்று வந்து எடுத்துப்போகச் சொன்னாள். நகைகளை ஒரு பெட்டியில் எடுத்து வைத்தாள். பூஜையறை பாக் செய்ய மனமே வரவில்லை. பூஜையறையின் மார்பிள் தரையைத் துடைத்தாள். நடுநாயகமாக இருந்த பூஜை மண்டபத்தைத் துடைத்தாள். வண்டியை எடுத்துப்போய் பெட்ரோல் பம்புக்குப் போய் ப்ளாஸ்டிக்குவளை நிறைய நிரப்பிக்கொண்டாள். மிஸ்டர்ஸ்பாட்ஸுக்குப் பிடித்த உணவையும் வாங்கிக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்து ஸ்பாட்ஸை வண்டியிலேயே விட்டு காரை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு, உள்ளே வந்த நீலிமா, பூஜை மண்டபத்தின் முன் ஒரு டஜன் விளக்கேற்றினாள். மணி நான்கு நாற்பது, ஷ்ரேயஸ் 20நிமிடங்களில் வந்து விடுவான். நீலிமா நிம்மதியோடு பஜனைப் பாடல் சீடியை ஓட விட்டாள். ப்ளாஸ்டிக்குவளை பெட்ரோல் அத்தனையும் தலையில் கொட்டிக்கொண்டு விளக்குகளை நோக்கிப் பாய்ந்தாள். 

Monday, January 02, 2012

பேயூரில் ஆவிபிடித்ததும், பனிநீராடியதுமான கதைகள் (புத்தாண்டுச் சுற்றுலா)

உங்க எல்லாருக்கும், எனது புத்தாண்டு வாழ்த்துகள்!! இந்த ஆண்டிலயாவது நல்லா உடற்பயிற்சி செய்யணும், பத்து கிலோ குறைக்கணும் என்று டிசம்பர் 31ந்தேதி உறுதி செய்து ஹிஹி, ஜனவரி 2ந்தேதியே உடற்பயிற்சி செய்யாத ஆளு நான். என்னைப் போலவே நீங்களும், ஹிஹி, டாப்ஃப்ளோர் ஸ்ட்ரா ங்க் பட் பேஸ்மெண்ட் வீக் என்றால்..... உங்களுக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் வாழ்த்துகள்:-)

நீங்க என்ன செய்தீங்க? இந்த புத்தாண்டுக்கு என்ன செய்தீங்க என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எல்லாரும் எங்க போனீங்க, இல்லாட்டி தொலைக்காட்சியில என்ன பார்த்தீங்க, வீட்ல என்ன செஞ்சீங்க என்று தெரிந்து கொள்ள விருப்பம்.

சரி, நான் என்ன செய்தேன்? பெரிய புள்ளக்கு 11 வயசு. பேய் பூதம் பற்றி பயம்/ஆர்வம் உள்ள வயது. "கூடப் படிக்கிற புள்ளங்க சவான்னா (Savannah) என்கிற ஊருக்குப் போயிட்டு வந்திருக்காங்க, நாமும் போவோம்"னு பிடுங்கி எடுத்ததால, அங்கு போனோம்.

சவான்னா! சவான்னாவின் ஊர்ச்சதுக்கம்:


சவான்னா, ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களில் (USA) நாட்டிலேயே அதிகப்படியான பேயாடும் ஊர் என்று பெயர் எடுத்தது. "சவான்னா" என்கிற ஆறு அட்லாண்டிக் மாகடலோடு கலக்கும் இடத்தில் இருக்கிறது இது. வெள்ளையர்கள் 1733இல் இங்கே முதலில் குடியேறியிருக்கிறார்கள். ஜெனரல் ஓகில்தோர்ப், அவரது 120 படைவீரர்கள், "ஆன்" என்ற கப்பலில் சவான்னா ஆற்றில் வந்து இறங்கினர். பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ்-இன் பேர்சொல்லும் முகமாக, ஜார்ஜியா என்ற மாநிலத்தை உருவாக்கினர். அதன் தலைநகரானது சவான்னா நகரம். (இன்றைக்கு ஜார்ஜியா மாநிலத்தின் தலைநகரம், அட்லாண்டா நகரம் ஆகும்). இங்கே இருக்கும் எல்லா இடங்களிலும் சைக்கிள்களில் போகலாம்; வாடகை சைக்கிள்கள், தானுந்துகள் எல்லாம் கிடைக்கின்றன.

சவான்னா நகரம் ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களிலேயே, மிகப்பெரிய கப்பல் சரக்குக் கொள்கலம் போகக் கூடிய நிலையம்; 4வது பெரிய துறைமுகம். சவான்னா ஆற்றின் மே ல் இருக்கும் பாலம் (படம் கீழே), 185அடி உயரக் கப்பல்கள் போக 1023அடி அகலப் பாதையோடு இருக்கிறது. சுமார் 2மைல் நீளமும் 1100அடி அகலமும் உள்ள பாலம். நாங்கள் இருக்கும்போதே கார்கள் பலவற்றைச் சரக்காக எடுத்துச் செல்லும் கப்பல்கள் பார்த்தோம்.
சவன்னா வரலாறு: பொதுவாக, மற்ற ஆங்கிலேயர்க ள் போலில்லாமல், ஜெனரல் ஓகில்தோர்ப், சவான்னா நகர்ப்பக்கம் இருந்த சிவப்பிந்திய மக்கள் தலைவர் யாமாக்ரா-வோடு நட்பு பாராட்டினார். இதனால் மற்ற அமெரிக்க மாநிலங்களில் இருந்த சிவப்பிந்தியரை சண்டை, சச்சரவு / தந்திரக் கொலைகள் மூலம் வென்ற வெள்ளையர்கள் இங்கே நட்போடு தங்கள் நகரத்தை நிலைநாட்டினர்.

சவான்னாவை 1800களிலேயே வலைக்கிராதி போல சதுரங்களாகக் கட்டியிருக்கிறார்கள். மது, கறுப்பின அடிமைத்தொழில், விலைமாதர் தொழில், வழக்கறிஞர் தொழில் இவற்றை ஓகில்தோர்ப் தடை செய்திருக்கிறார். இதுல ஒன்று வந்தாலும், மற்றதும் வந்திடும்னு! ஆனாலும், குறுகின காலத்திலியே கறுப்பின அடிமைகள், வழக்கறிஞர்கள், விலைமாதர்னு எல்லாரும் அப்புறம் இந்த நகரத்துல தொழில் செய்யத் தொடங்கிட்டாங்க.

பேயாடுதோ? அந்தகாலத்துக்கே உரிய வன்கொடுமைகள் - சின்னப்பசங்க, பெண்கள், அடிமைகள் மீதான வன்கொடுமைகள் - இருந்திருக்கின்றன. இதைத் தவிர 1796, 1820களில் பெரும் தீவிபத்துகள், 1820, 1854களில் நிகழ்ந்த தொற்றுநோய்கள் இவற்றின்போது பெரிய எண்ணிக்கையில் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. நெருப்பின்போது மாடியில் சிக்கிய குழந்தைகள், வன்கொடுமைகளில் இறந்த உயிர்கள், கணவனின் கள்ளக் காதலியைக் கொன்று தானும் மடிந்த சீமாட்டி என்று குறை-ஆயுளில் மடிந்த உயிர்கள் ஆவிகளாக உலவுகின்றனவாம். ஒரு வீட்டுக்குள்ளே போனாலே, தன் கண்டிப்பால உயிரிழந்த மகளால தானும் வருந்தி உயிர்நீத்த ஒருவரோட ஆவி, வீட்டுக்குள்ளே வந்தவர்களைப் பிடித்துத் தள்ளி விடுகிறதாம். "ஆவிபிடிக்க", ஆவிகளின் சங்கேத மொழியைப் பதிவுசெய்யன்னு ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த குழுவும் பலவித சத்தங்களைப் பதிவுசெய்கிறார்கள்: "ஐயோ, காப்பாத்துங்க" என்பது மடிந்த கள்ளக் காதலியின் குரலாம்.

இந்தப் படத்தில உங்களுக்கு எவ்வளவு பேய் தெரியுது?
இந்த செய்திகளில் எனக்கு சுவை தோன்றக் காரணமே, என் கூட பணிபுரிந்த ஒரு பெண்மணி. சவான்னாவில் பிறந்து வளர்ந்த அவரோடு, வேறொரு நகரத்தில் சிலகாலம் பணிசெய்தேன். அப்போ அவர் சொன்ன கதை: 1820இல் நிகழ்ந்த பெரும் தொற்று நோய் மற்றும் தீ விபத்தில், மயக்கத்தில் இருந்தவர்களையும் இறந்தவர்களோடு, புதைக்க இடமில்லாமல், வீடுகளின் அடிப்பக்கத்தில் தூக்கிப்போட்டு, செங்கல் சுவர்கள் கல்லறைகள் கட்டினார்களாம். இந்த சுவர்கள் சிலவற்றின் உள்பக்கத்தில், இறக்காமல் அந்தச் சுவர்க்கல்லறைக்குள் மாட்டினவர்கள் மயக்கம் தெளிந்த எழுந்திருக்கிறார்கள்; எழுந்த பிறகு, வெளியில் வர நகங்களால் சுவரைப் பிறாண்டிய அடையாளங்கள் இன்றைக்கும் இருக்கின்றனவாம். (இதை எங்களுக்கு ஊர் சுற்றிக் காட்டிய வழிகாட்டியும் ஒப்புக்கொண்டார். கூட குழந்தைகள் இருந்தமையால், இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாது என்றுவிட்டார்!). இப்படி க் குறை ஆயுளில் இறந்தவர்கள் ஆவிகளாகத் திரிகிறார்களாம். சவான்னாவில் வாழும் பலரும் அப்படி இப்படி பேய்களைப் பார்த்த கதைகளைச் சொல்கிறார்கள்!

சவான்னா இன்றைக்கு: இன்றைய சவான்னாவில் உலகத்தரம் வாய்ந்த "சவான்னா நுண்கலை/வடிவமைப்புக் கல்லூரி" (Savannah College of Arts and Design) இருக்கிறது. உடைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்களையும் இந்த கல்லூரி மாணவர்களே புதுப்பிக்கிறார்கள். சவான்னா நகரம் இருப்பது சவான்னா ஆற்றங்கரையில் என்பதாலும், பழமை வாய்ந்த/வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நகரம் என்பதாலும், ஆற்றங்கரையில் படகு சவாரி, இரவு உணவுடன் கூடிய படகு சவாரி, பேய்ச்சுற்றுலா, ஊர்ச்சுற்றுலா என்று நிறைய உலாக்கள் இருக்கு. சாப்பாட்டு விடுதிகள் நிறைய! வித விதமான உணவு வகைகள், தேன் வகைகள் - ம், ம், சுவை!

புனித பாட்ரிக்ஸ் நாள் ஊர்வலம் "பெருங்குடி" ஊர்வலம். ஊர்வலம் வரும் சாலைகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் விடுமுறை கூட விட்டுவிடும்!

திருமணங்கள் பல நடைபெறுகிற காதல்பேரூராகவும் இது இருக்கிறது!

பல ஆங்கிலத் திரைப்படங்கள் எடுத்திருக்காங்க இந்த ஊரில்! Forrest Gump, Midnight in the Garden of good and evil, The Gingerbread man, Glory, Cape Fear, The General's Daughter... இந்த பட்டியல் நீண்டுகிட்டே போகுது: http://www.savannahoffthebeatenpath.com/Top%20Level/books.htm

இன்னும் சவான்னா பற்றி தெரிந்து கொள்ளணுமா? சவான்னா பற்றிய ஒரு சுட்டி: http://www.georgiaencyclopedia.org/nge/Article.jsp?id=h-1056 . சவான்னாவின் பேய்களைப் பற்றி இன்னும்: http://www.google.com/search?q=savannah+ghost+stories

******************************************************************************

பக்கத்தில் இருக்கும் ஊர்/தீவுகள்: புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்க்க நாங்கள் அடுத்துப் போனது டைபீ (Tybee) தீவு. சவான்னா பக்கத்தில் இருக்கு.
இந்த அலைமேடையிலிருந்து தான் வாணவேடிக்கை நடந்தது! டைபீத் தீவில் எங்களைப் போன்ற சைவ உணவுவிரும்பிகளுக்கு அவ்வளவா உணவு கிடைக்கலை. இந்திய உணவு இந்தத் தீவுலியே இல்லை! படேல்கள் இங்கியும் தங்குவிடுதிகள், எரிபொருள் நிலையம் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றாலும்!! இருந்தாலும், சவானாவுக்குப் பயணம் செய்து பிடித்த தாய் நூடுல்ஸ் / சைவ உணவு சாப்பிட்டுட்டு வந்தோம்.

புத்தாண்டுக்கான வாணவேடிக்கைகள், பட்டாசுவெடிகள் எல்லாவற்றையும், கடற்கரையிலியே இருந்து பார்த்தோம். தலையிலே கோமாளி குல்லா, சத்தம் போடுற பீப்பீ வச்சுகிட்டு எல்லாரையும் போல அலப்பறையும் செய்தோம். போலீஸு கண்ணுல படவில்லை, எனவே நல்லாவே சத்தம் போட்டோம்:-)

புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1, 2012) காலையில் நிலமுனைநீச்சல் (polar plunge) என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர், பகடிக்குரிய உடைகள், வீட்டு உடைகள்னு விதவிதமா களியாட்டம் போட்டுகிட்டு நீரில் குதித்தார்கள். இது கின்னஸ் சாதனை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு வானொலி நிலையம் ஏற்பாடு செய்தது. அதுனால உள்ளூர் மக்கள் எக்கச்சக்கமாக வந்திருந்தார்கள்.
இம்புட்டு தொலைவு வந்திட்டு, தண்ணி பார்ட்டி இல்லாமலா? "டால்பின் கடற்பாறை உணவகம்" (dolphin reef restaurant - படம் கீழே) போய் சாப்பிட்டோம். கடலைப் பார்த்துட்டே சாப்பிடலாம். பச்சைத்தக்காளிக்கா ய் பஜ்ஜி (இந்நாட்டின் தெற்கத்திய சிறப்புத் தின்பண்டமாம் இது), பாஸ்டா (கணவரும் நானும்), பிட்சா, வெஜ் கேசடியா (குழந்தைகள்) சாப்பிட்டோம்.
இன்னும்... பக்கத்து ஊர்கள்: சவான்னா பக்கத்திலேயே ஹில்டன்ஹெட் ஹில்டன்(தென் கரோலினா மாநிலம்) என்கிற தீவு - மிகவே வணிகப்படுத்தல் இந்தத்தீவில்! - இருக்கிறது. தென் கரோலினா மாநிலம் பாலத்துக்கு அந்தப்பக்கம்! நிறையபேர் தென்கரோலினாவில் குடியமர்ந்து ஜார்ஜியாவில் பணிபுரியவும் செய்கிறார்கள்.

நிறைய தீவுகள், தங்குவிடுதிகள் - சிறுகுடில், படுக்கையும்காலையுணவும் வழங்குவிடுதிகள், பெரிய உல்லாசவிடுதிக ள், எல்லாம் இருக்கின்றன.

விமானநிலையங்கள்: சவான்னா மற்றும் ஹில்டன்ஹெட் விமானநிலையங்கள் அருகருகே இருக்கின்றன. சவான்னாவுக்கு போக டெல்டா மற்றும் ஏர்ட்ரான்- இல் குறைந்தவிலை சீட்டுகள் கிடைக்கின்றன.

படங்கள் உதவி: tybee-times, ibookcdn.com, savannah-georgia-vibe-guide.com, விக்கிபீடியா, மற்றும் கூகிள் படங்கள்.

"முக்கிய" குறிப்பு: அப்போ ஆவி பிடிச்சோமா இல்லியா? பெரிய புள்ளக்கு சவான்னா போய்ச்சேரையிலியே ஆஸ்துமா பிரச்னை தொடங்கிருச்சு. அந்த ஆவி தான்...ஹிஹி, பிடிச்சோம். எப்படி தலைப்புக்குக் கொணாந்தேன்!

Tuesday, September 27, 2011

வேப்ப முத்து -

வேப்ப முத்து

தமிழோவியத்தில் வெளி வந்த என் சிறுகதை (முழுக்கப் படிக்க சுட்டியில் தட்டவும்!)


indiangirl1 வேப்ப முத்துஉள்ளேயிருந்து மீன் குழம்பின் வாசனை வந்து கொண்டிருந்தது. நாவூறியது மீனாவுக்கு. ஞாயிறு மதியம் வீட்டுக்கார வசந்தாக்கா அசைவம் சமைத்தால், ஊருக்கும் மணக்கும். ஆனால், சமைத்து முடித்து வீட்டினர் சாப்பிட்டப்புறம் மீனா சாப்பிடும் போது மணி இரண்டாகி விடும். இப்பொழுதிருக்கிற பசிக்கு, யாருக்கும் தெரியாமல் சிறியதாய் தேங்காயிலிருந்து கீறி எடுத்து வந்ததை கைக்குள் வைத்து கொல்லைப்பக்கம் போய், வேப்ப மரத்தின் கீழ், முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டாள். கொல்லைப் பக்கம் முழுக்க வேப்ப மரத்தின் நிழல். பறவைகள் பழுத்த வேப்பம் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் எச்சம் மேலே விழாமல் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் மீனா.
மீனாவுக்கு எட்டு வயது வரை, பெற்றோர் வீட்டில் இருந்த போது மீன் குழம்பு சாப்பிட வழி இருக்கவில்லை. ஆனாலும், இங்கே வந்து இரண்டு வருடங்களில் நல்ல சாப்பாட்டு ருசி கண்டாயிற்று.  வசந்தாக்கா தன் இரட்டைக் குழந்தைகளை கவனிக்க, தன் உறவுக்கார வள்ளியின் மகளான மீனாவைக் கொண்டு வந்து வைத்திருந்தார். எட்டு வயதுத் தன்னம்பிக்கையோடு மீனா தன் தம்பி மணியை கவனிப்பது போலவே இரட்டைக்குழந்தைகள் ராஜேஷ், ராஜஸ்ரீ இருவரையும் கவனித்துக் கொண்டாள். அந்த பாசத்துக்காக, வசந்தாக்காவும் மீனாவிடம் அன்போடு இருப்பாள். யாரும் கவனிக்காத போது எப்போதேனும் மீனாவுக்கு மிட்டாய் வாங்க காசு கிடைக்கும். மாமியாரும் குழந்தைகளும் தூங்கி, வசந்தாக்காவின் கணவர் சுரேஷ் மாமா கடையை கவனிக்கப் போன மதியப் பொழுதுகளில், வசந்தாக்கா மீனாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.
ஆனாலும், விழித்துக் கொண்டிருந்த போதெல்லாம் வசந்தாக்காவின் மாமியாரின் கண்கள் மீனாவையே கவனித்துக் கொண்டிருக்கும். மாமியார் நடக்க முடியாதென்றாலும், உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிகாரம் செய்து கொண்டிருப்பார். அது தான், மீனாவுக்குக் கொள்ளைப்பசியாய் இருந்தாலும், சின்ன தேங்காய்க்கீற்றை ரகசியமாய் எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கத்தில் மீனா சாப்பிட்டுக் கொண்டிருந்ததன் காரணம்.
தேங்காய்க் கீற்றை கையில் மறைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கொல்லைப் பக்கம் இருந்தவளை, வசந்தாக்கா கூப்பிட்டாள். குழந்தைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர். வசந்தாக்காவுக்குக் கூட மாட மீனா உதவி செய்து விட்டு, மாமியாருக்கும் சுரேஷ் மாமாவுக்கும் பரிமாறி, வசந்தாக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தனக்கும் உணவைத் தட்டில் இட்டுக் கொண்டாள் மீனா.  சாப்பிட்டுக் கொண்டே இருந்த போது, புரை ஏறியது. “அம்மா நினைக்கிறா அக்கா ” என்றாள் மீனா. புரை எறினதற்காக மீனாவின் தலையைத் தடவிக் கொடுத்த வசந்தாக்கா, “உங்க அம்மா வந்து போயி ஒரு மாசமாச்சில்ல, உன்னைப் பாக்க வருவாளாயிருக்கும்!” என்றாள்.


.......................மேலும் படிக்க: http://www.tamiloviam.com/site/?p=1920


Tuesday, June 21, 2011

இந்த வருட கோடை விடுமுறை

எங்க வீட்டு வம்பர்கள் - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற மூத்தோர் சொற்படி, எங்க அம்மாவை நான் படுத்திய பாடு எனக்கு வந்து விடிகிறது - இந்த கோடை விடுமுறையில் செய்யும் சில வம்புகள்:

வெளியில் கடைகளில் மேலே போகிற நகரும்-மாடிப்படிகளில் பொறுமையாக கீழே இறங்கி வருவது - நான் எவ்வளவு கூப்பிட்டாலும் அவர்களுக்கு காதில் விழாத பொறுமை!

வெளியில் போனால், தமிழே புரியாத மாதிரி நடிப்பது - ஹிஹி ஆங்கிலத்தில் திட்ட வேணாமே என்ற நல்ல மனசில் நான் தமிழில் திட்டிக் கொண்டிருப்பேன்...

சுற்றி சுற்றி வந்து அமெரிக்க இந்திய மொழியில் (இவர்களே எதோ உளறிக் கொண்டு) "பலா பலா பலா" என்று கத்தியவாறே ஓடுவது

கடைக்கு வந்து இப்படி மானத்தை வாங்கறியே என்றால், நேரே போய் கடையின் கண்ணாடிச் சுவரில் தலையை முட்டிக் கொண்டு தமிழில் "ஐயோ, முருகா காப்பாத்து" என்று சொல்வது (அம்மாவை கேலி செய்வதாம்)

அப்பா வீட்டுக்கு வந்ததும், அவர் போட்டிருக்கும் சட்டை, உள்சட்டையையும் சேர்த்து தலைக்கு மேலே கொண்டு வந்து அப்பாவை "ஜெயிலில் போட்டு" விட்டு அப்பாவை சுற்றி வந்து அவரை அழ வைத்தல்.


வீட்டுக்கு அருகில் இருக்கும் ஓடையிலிருந்து கண்டதையும் கொண்டு வந்து இலை தழைகளில் சுற்றி வைத்து அம்மாவுக்கு "அன்புப் பரிசு" ஆகக் கொடுத்தல், பல சமயம் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய "அன்புப் பரிசு" மறந்து போய் படுக்கை/சாப்பிடும் டேபிள் மேலே பத்திரமாக இருக்கும்...

இன்றைய கடற் கொள்ளை விளையாட்டு நன்றாக இருக்கே என்று நான் நினைப்பதற்குள், சண்டை வந்து முந்தா நாள் விளையாடின விளையாட்டு வேறொன்று நடுவில் ஓடும்.

அவர்களின் சண்டையின் போது நான் சமரசம் செய்தால், செய்த இரண்டாம் நிமிடம் என்னை கேலி செய்தல்.

ஏன் இத்தனை லூட்டி என்றால், இந்த குழந்தைப் பருவம் முடிந்து விடப் போகிறதே என்ற கவலை அவர்களுக்கு.

இந்த கோடை விடுமுறை முடிந்து விடப் போகிறதே என்ற கவலை எனக்கு. உங்களையும் இழுத்துட்டு எப்படி தான் இந்தியா பயணம் போவேனோ, ப்ளேன் கதவை திறந்து நான் அண்டார்க்டிக் கடலில் குதிக்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன்.

Wednesday, April 27, 2011

இருட்டு நிழல்கள்

போகிற பாதை தெரியாத இருட்டு
தொடர்ந்து வரும் கருப்பு நிழல்கள்
இருளில் கருப்பு இருட்டு உண்டோ?

பாதைகளில் பரமபதம்.
சோழி உருட்டுவதும் நானில்லை.
பாம்புகளின் வழுக்குதலில்
ஏணிகளின் கனவுகள்.

கோர உருவங்கள் கற்பனையில் வருமளவு
விகாரக் குரல்கள்.

எக்களிப்பில்,  ஆங்காரத்தில்,
உமிழ்ந்து வரும் வசைகளில்,
கண்ணீர் இருட்டைச் சுட வைக்கும்.

நான் என்னிடமிருந்து காணாமல் போவதற்குள்
எங்கேனும் வீடு திரும்ப வேண்டும்.
 

Friday, April 15, 2011

பெண் பார்க்கும் நாடகத்தில், பிள்ளைக்கு இவ்வளவு கஷ்டமா? (இயற்கை உலகம்)

பதிவைப் படிக்க வந்தீங்களா, சௌக்கியமா? நல்லா குந்திக்குங்க! கம்பியூட்டர் மானிட்டரு பொட்டி நல்லா தெரியுதா? தெரியலயின்னா சரி பண்ணிக்குங்க. படம் காட்டப் போறேன். படத்தில், இந்திய டிவியில், நேஷனல் ஜியாக்ரஃபி சானலில்   காட்டாத எதுவும் இல்லை, என்றாலும், இந்தப் படத்தை, பெற்றோர் குழந்தைகளுக்குக் காட்ட விருப்பம் இல்லை என்றால் இனி பார்க்க வேண்டாம்.

"இந்த காலத்தில, பொண்ணுங்களுக்கு என்ன சுதந்திரம்பா? அவங்களே பிள்ளைய பாத்துக்குறாங்க,  இஷ்டம் இல்லைனு சொல்றாங்க, எங்க காலத்துல..."னு சொல்றவங்களுக்கான ஸ்பெஷல் படம் இது.

எங்க வீட்டுல, பெற்றோர் தெளிவா இருந்தாங்க, "பிள்ளையோட பேசு, புரிந்து கொள், உனக்குப் பிடிச்சா தான் கல்யாணம்"னு பக்காவா, ஒரு குடம் காவேரி மணலை.. அவ்வ்வ்... தண்ணியை தெளிச்சு விட்டாங்க. (நான் வளர்கிற காலத்தில, தண்ணி இல்லை, மணல் தான் இருந்தது, இப்ப மணலும் காணோம்னு சொல்றாங்க!)

என் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தது வீட்டுல. (என்கிட்டே அவ்வளவு பயம்னு யாரங்கே சொல்றது?:-)

பறவை / விலங்கு  / பூச்சிகளின் வண்ண உலகத்தில், பெற்றோராவது ஒண்ணாவது! அதுங்களே பாத்துக்கிட்டு போயிட்டே இருப்பாங்க! இந்த வண்ண உலகத்தில் பொய், புரட்டு கிடையாது.

ஆஸ்திரேலிய "மயில் சிலந்தி"களின் "பொண்ணு பார்க்கிற" நாடகம் இங்கே.பொறுமையா ஒவ்வொரு ஆண் சிலந்தியும் பெண்ணைக் கவர "காலைத் தூக்கி" நர்த்தனம் ஆடி, தொகை விரித்து... நீங்களே பாருங்க!



படம் பார்த்தீங்களா? எப்படி இருந்தது? சொல்லிட்டுப் போங்க! நன்றி! (அப்புறம், புது டெம்ப்ளேட் எப்படி இருக்கு, "பதிவு அமர்க்களமா இருக்கு"ன்னு எல்லாம் சொல்லிடுங்க:-)


Friday, April 08, 2011

மக்கள் சக்தி ஆளும் மன்னர்களுக்குத் தெரியட்டும்!

சின்ன வயசில இருந்து 'அரசியல்னா சாக்கடை, அரசியல்வாதி கிட்ட வம்பு வைக்காதே'ன்னு சொல்லி வளர்த்திருப்பாங்க, இல்ல 'தம்பி, ஓங்கினவன் கைய ஒடச்சிட்டு வந்தாத்தானே நாளைக்கு அரசியல்ல பெரிய ஆளா வர முடியும்'னு சொல்லி வளர்த்திருப்பாங்க. ஒரு பக்கம் அடிமாடுகளா வளர்கிறோம், இல்லையென்றால் அடியாள்களாக வளர்க்கப்படுகிறோம்!

எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம். எங்கள் திருமணம் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னால நடந்தது, அதுக்கு சர்டிஃபிகேட் வாங்க நடையா நடந்தார் என் கணவர். இந்த சான்றுப் பத்திரம் வாங்க லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு அவருக்கு ஒரு வீராப்பு. அஞ்சு நாள் அந்த ஆபிசர் முன்னால உட்கார்ந்திட்டு வந்ததால், ஆபீசர் வெறுத்துப் போய் லஞ்சம் வாங்காமல் அந்த பத்திரத்தைக் கொடுத்திட்டார். ஒரு பத்திரத்துல கையெழுத்துப் போடத் தானே அரசாங்கம் அவருக்குச் சம்பளம் கொடுக்குது? எதுக்கு நாம மேல போட்டுக் கொடுக்கணும்?

ரேஷன் கடையில நின்னு சாமான் வாங்கியிருக்கீங்களா? சின்ன வயசில நான் வாங்கியிருக்கேன். நான் பார்த்த போதெல்லாம், நடப்பது இது தான்: ரேஷன் கடை ஊழியருக்கு வேண்டிய ஆள்னா, க்யூவுல நிக்க வேண்டாம். நல்ல அரிசி வந்தா, வேண்டியவங்களுக்குத் தான் போகும். ஏன்?

நேத்தைக்கு ஒருத்தர் நொந்து போய் ட்விட்டர்ல எழுதுறாரு: 'லோ வோல்ட்டேஜ் கரன்ட்டா இருக்கு. யாரச் சொல்லி என்ன பிரயோசனம்? தெரிஞ்ச கவுன்சிலர் கிட்டச் சொல்லணும்' என்று! 'தெரிஞ்ச கவுன்சிலர்' கிட்ட சொன்னா, அவர் நமக்கு உதவி செய்ய அவருக்கு என்ன முகாந்திரம்? கரன்ட் சரியா வர வைக்க எல்லாரும் அவங்க-அவங்க கவுன்சிலர் கிட்ட போனா என்ன ஆவும்? 'யாரு நிறைய எனக்கு லஞ்சம் கொடுக்கிறாங்களோ, யாரு எனக்கு வேண்டப்பட்டவங்களோ அவங்களுக்குத் தான் நான் உதவுவேன்' அப்படின்னு சொல்லப் போகிறார்?

தெரிஞ்ச விஷயம் தானே? பூனைக்கு யார் மணி கட்டப் போறாங்க? படிச்சவங்களாச்சும் அரசியலைத் தூய்மைப் படுத்தி, 5 வருடம் இருந்து, பாலம் கட்டுறது; ரோடு பள்ளம் சரி செய்யிறது; பென்ஷன் வாங்கித் தரதுன்னு முயற்சி செய்து கொடுத்தால் தான், நம் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகள் என்னன்னு தெரியும்; கட்டமைப்பின் ஓட்டைகள் சரியாகும்!

படிச்சவங்க ஏற்படுத்தின அமைப்பு இந்த அரசாங்கம். இதுல ஏன் இத்தனை ஊழல்? அரசாங்கத்துக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எப்படி வந்தது? 

ராசாவா இருக்க வேண்டிய ஒரு மந்திரி 'மக்களுக்காக அரசாங்கம் புதுக் கடையத் திறந்திருச்சு, ஆனா, அப்படித் திறந்திருச்சுன்னு ஒரு மாசம் கழிச்சுச் சொன்னா, எனக்கு வேண்டிய ஆளுங்க வந்து அந்த ஒரு மாசத்துக்குள்ள வேண்டிய சாமானை எடுத்திட்டுப் போவட்டும்'னு லட்சம் கோடின்னு மாய்மாலம் பண்றாரு. ஆனால், அவருக்குக் கையூட்டாக பணம் வந்ததுன்னு, 'மவனே'ன்னு அந்த சிவனே வந்து தீர்ப்பு சொன்னாலும், வந்த கையூட்டுப் பணத்தை மந்திரி திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை!

இந்தியாவில் மாற்றம் ஏற்படணும்னு, லஞ்சம் ஊழலை எதிர்த்து நல்ல மனுசங்க சேர்ந்து தோற்றுவித்த இயக்கம் இந்த மக்கள் சக்தி இயக்கம்!!  இந்த இயக்கம், நம்மால மாற்றம் ஏற்படுத்த முடியும்னு படிச்ச / படிக்காத நல்லவர்களை வேட்பாளர்களா நிறுத்தியிருக்கு. வேட்பாளர்கள் விவரம் இங்கே இருக்கு. வோட்டுப் போடுங்க! மாற்றத்தை ஏற்படுத்துங்க!

தமிழ்நாட்டில், 15 மாவட்டங்களில் 35 தொகுதிகளில் மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடுகிறது. லோக்சத்தாவோடு கையிணைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும்னு நம்புகிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவங்க, சட்டசபைக்குப் போயிட்டு வந்தவங்க, நம்ம கட்டமைப்புல இருக்கிற‌ பிரச்னைகளை எடுத்துச் சொல்ல மாட்டேன்றாங்க. மக்கள் சக்தி இயக்கம் சொல்லட்டும். மாற்றம் ஏற்படட்டும்.

மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடும் இடங்களில் நீங்களோ, உங்கள் உறவினர்களோ வசித்தால், என் மனமார்ந்த பணிவான வேண்டுகோள் இது! நீங்க என்னை விட வயசிலே பெரியவங்கன்னா, உண்மையான பணிவோட, வணங்கிக் கேட்டுக்கிறேன், வயசில் சின்னவங்க - ஓட்டுப் போடும் வயசா இருந்தால், காலரைப் பிடித்துக் கேட்கிறேன் - வோட்டுப் போடுங்க! மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க!

வோட்டுப் போடும் வயசு வரலைன்னா, முத வேலையா உங்க வீட்டுப் பெரியவங்களை வணங்கி, அதட்டி, கெஞ்சி, மிரட்டி எப்படியாவது வோட்டுப் போட வைங்க. எதிர்காலம் உங்களுதுன்னா, உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய‌ணும்னா, லஞ்ச ஊழலற்ற பெரிய நாடா இந்தியா வரணும்னா, மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடச் சொல்லுங்க.

மாற்றத்துக்கு வோட்டுப் போடுங்க! 
மறுமலர்ச்சிக்கு வோட்டுப் போடுங்க!
மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க!

PhD படித்த, கோவை பல்கலை முன்னாள் துணைவேந்தர், RECT/NITT முன்னாள் முதல்வர் திரு. இளங்கோ, இந்தத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில நிற்கிறார்.

விஜய் ஆனந்த், அமெரிக்க வாழ்க்கையைத் துறந்து, 5th Pillar என்கிற இயக்கத்தைத் தொடங்கிட்டு, இப்ப மக்களுக்காகப் பயனுள்ளதா செய்யணும்னு கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இந்தத் தேர்தலில் மக்கள் சக்தி இயக்கத்துக்காகப் போட்டியிடுகிறார்.

மக்கள் சக்தி இயக்கத்துக்காக, ஐந்தாம் வகுப்புப் படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, MBA/LLB படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, மாற்றம் ஏற்படுத்தச் சொல்லி வோட்டுப் போடுங்க!

Thursday, February 10, 2011

“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொட்டு...

தமிழோவியத்தில் வெளிவந்த என் அலம்பல்: “டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி

அமெரிக்காவில் எனக்குப் பிடித்த பத்து விஷயங்களை, “டேவிட் லெட்டர்மென்” பார்த்து வான்கோழி நான் ஆடியிருக்கிறேன். “நல்லாயிருக்கு” போன்ற கமெண்டுகள் தமிழோவியம் தளத்தில் போட்டு விடுங்கள்:) நல்லாயில்லை என்றால், இங்கேயே சொல்லிடுங்க! ஏன் என்றால் இந்தப் பதிவு இந்த காரணத்தாலேயே காலம் காலமாக மட்டுறுத்தப்படுகிறது ஹிஹி!!

Monday, February 07, 2011

கரைமேல் பிறந்து விட்டோம்!

மீனவர்களின் நிலை பற்றி நாளும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கோம். நம்ம நண்பர்கள் ட்விட்டரிலும் பதிவுகளிலும் பதிவதையும் பார்க்கிறோம். தோழி சந்தனமுல்லை சோம்பேறியான‌ என்னையும் பதியச் சொல்லிக் கேட்டார், கொஞ்சம் லேட்டாப் பதிகிறேன். பதிவெழுதப் போதுமான‌ நேரமின்மை முதன்மைக் காரணம்; மற்றொன்று, என் முழுமுதற் ஆதரவு மீனவர்களுக்கு என்றாலும், பதியும் போது தவறில்லாமல் பதிய வேண்டுமே என்று கொஞ்சம் படித்துக் கொண்டேன். எனக்கு இன்றைய‌ இந்திய அரசிடம் நம்பிக்கை இல்லை. ஆனால், இந்திய இறையாண்மையில் முழுமுதல் நம்பிக்கை உண்டு. எங்கம்மாவின் இந்திய மடியில் 20வருஷம் வளர்ந்த நன்றியுணர்வு உண்டு. எனவே, அக்கறையோடு பதிகிறேன்,

அ. இந்திய ஸ்ரீலங்கா கரையிடையில் 1980இலிருந்து தமிழக மீனவர்கள் 800பேர வரை இறந்திருக்கிறார்கள். இதற்காக, இந்திய அரசு, நல்ல விசிறிக்கட்டையால இலங்கை அரசின் முதுகைச் சொறிந்து கேட்டிருக்கு. அதைத் தவிர என்னவும் செய்யலை. இது ஏன்?
  1. முதல்ல 2011 ஜனவரி 12ம் தேதி மீனவர் கொலை செய்யப்பட்ட போது, இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் சொல்லியிருக்கு இந்திய அரசு. கழுத்துல கயிறு இட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கார் இந்திய மீனவர் கண்டனம் சொல்லியிருக்காங்க. வெறும் கண்டனம் மட்டுமே. எச்சரிக்கை அல்ல. இலங்கை என்னங்க தம்மாத்தூண்டு நாடு, அவங்க கிட்ட பயப்பட என்ன காரணம்? சீனா இலங்கைக்கு ஆயுதங்கள் சப்ளை செய்கிறது, அதுனால, ஜாக்கிரதையா செயல்படுகிறோம்னா, எப்ப தைரியமா செயல்படுவீங்க? தமிழக மீனவர்கள், அருணாசல பிரதேசத்தில நடக்குறாப் போல, பாஸ்போர்டு விசாவோட தான் தண்ணியில் இறங்கணும் என்கிற காலத்திலாவது எதுனாச்சும் அறிக்கை விடுவீங்களா?
  2. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதியான இந்த நிபந்தனையை (பாருங்க கீழே) மீறிய இலங்கை அரசுக்கு என்னாங்க புண்ணாக்கு மரியாதை? இலங்கை அரசுக்கு ஏன் கடுமையான எச்சரிக்கை விடுக்கலை?
    "இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.'
  3. கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்த காரணம், அணுகுண்டு வெடித்த போது, ஐ.நா. சபையில் நமக்குக் கைக் கொடுத்த இலங்கைக்கு நட்பாய்/நன்றியாய்க் கொடுத்ததுன்னு சொல்றாங்க. வங்க நாட்டுக்கு தீவைக் குத்தகையாகக் கொடுத்த போது போட்ட மாதிரி இங்கியும் செய்திருக்கலாம். செய்யலை. இன்றாவது, நிபந்தனை மீறியது என்று வாலாட்டிய சின்ன நாட்டு அரசிடம் அச்சம் ஏன்?த‌ன் குடிமகன் இன்னொரு நாட்டில் இறந்தார்னா, கோபம் கொள்ளும் வல்ல‌ரசுகள். இத்தனை பேரை இழந்திருக்கோமே, என்ன செய்தோம்? இனி இறப்பைத் தடுக்க நடுவண் அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?
  4. இலங்கை கடல் எல்லை அருகே மீன்வளம் நல்லா இருப்பதால் மீனவர்கள் அங்கே போகிறார்கள் என்று சொல்லும் அரசியல்வாதிகள், கடல் எல்லை தாண்டிப் போய் மீன் பிடிக்க அரசாங்கம் ஏன் ஒப்பந்தம் செய்து கொள்ள உதவவில்லை? கடல் எல்லை தாண்டிப் போகாமல் இருக்க ஏன் அரசாங்கம், மிதவை அல்லது உயர்நுட்ப ஏற்பாடுகள் என்போர்சே செய்வதில் என்ன பிரச்னை? 

      ஆ. கட்சிப் பதிவர்கள் ஏன் மீனவர்களுக்கு ஆதரவாக ஒன்றும் சொல்லவில்லை? (நான் இதை எழுதும் போது ஃபிப்ரவரி 7!) கடந்த 4ந்தேதி நேராய்ப் போய் ஆதரவு சொன்ன பிஜேபியின் சுஷ்மா சுவராஜை விட லேட்டாய் நான் பதிவு போட்டிருக்கேன். கட்சியைத் தூக்கிக் கொண்டாடும் சில பதிவர்கள் ஏன் இது பற்றிப் பதிவே போடலை? (இந்த வருத்தத்தை நான் பல நாட்கள் முன்னமேயே ட்விட்டிவிட்டேன்:-(.

      இ. இதர கேள்விகள்/எண்ணங்கள் (என் முக்கியத்துவப் படியே இவை எண்ணிடப் பட்டிருக்கின்றன):
      • தொகுதிப் பங்கீட்டுக்கே டெல்லி வரை சென்று வந்த பெருந்தகை, டாய்லட் பேப்பராய்த் துடைத்துத் தூக்கி போட்ட கடிதம் தாண்டி எந்த வகையில் ஆதரவு தெரிவித்திருக்கிறார்?
      • வங்க தேசம், பாகிஸ்தான் இங்கெல்லாம் இப்படி நடந்தால், வட இந்தியர் சும்மா இருப்பாங்களா?
      • இலங்கைப் பதிவர்களின் நிலைப்பாடுகள் வேறுபட்டு இருப்பதைக் காண்கிறேன். ஏன் என்று புரிகிறது, தவறென்று என்றும் சொல்ல மாட்டேன். அது அவர்களின் நாட்டுப் பற்று. அதை மீறி என்னால் எதுவும் சொல்ல முடியாது....

      Monday, January 31, 2011

      சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை

      ஜனவரி 31, 2011 அன்று வெளியான சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை:

      தலைப்பு: பிஸ்கட்டு, பழம்! இணைப்பு: http://solvanam.com/?p=12746

      அந்த கதையோட வெளியான படத்தில் இருக்கும் நாற்காலி பத்தியும் எனக்கு ஒண்ணியும் தெரியாது, சொல்லிட்டேன். நீங்க எனக்கு பிஸ்கட்டு பழம் கொடுக்கலைன்னாலும், ஒரு நாலு வார்த்தை (or more) கதை எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டுப் போனா, போகிற காரியம் நல்லபடியாகும்;-)

      Wednesday, January 19, 2011

      புதிய கட்சி தொடக்கம்

      அகில உலக அளவில் தொடங்கப்பட்ட இந்த கட்சியைப் பத்தித் தெரிந்து கொள்ள ஆசையா வந்திருக்கீங்க.  வாங்க! வணக்கம். 

      கொள்கை?
      • கேப்பையில் வடியும் நெய்யை விற்று பெரிய கோடீஸ்வரன் ஆவணும்.
      • நாட்டுக்கு நல்லது செஞ்சி, ஏழ்மையை ஒழிச்சி, பெண்ணடிமை... இப்படியெல்லாம் நடக்கும்னு நம்புறவங்களை கட்சி மெம்பராக்கிக் காசு பாக்கணும்.
      கட்சியில மெம்பராவது எப்படி?
      தமிழ்ச் செய்தி படிப்பீங்களா?  அப்ப நீங்க ஏற்கெனவே மெம்பர் தான்? என்ன, இனிமே ஒழுங்கா மெம்பர்ஃபீ (அடச்சே, உறுப்பினர் உரிமைக்கட்டணம்) ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிச்சிருங்க.

      ஆங்?  கட்சி பெயர் என்ன?
      தேசீய கேனையர் முன்னேற்றக் கட்சி.  (தே.கே.மு.க.)

      எப்படிங்க இது? உலக அளவுன்றீங்க‌, தேசீய கட்சின்றீங்க?
      உலக அளவில் தொடங்கப்பட்ட தேசீய கட்சி.

      என்னாத்துக்கு இந்த கட்சி?
      எம்புட்டு செய்தி பார்க்கிறோம்?  அரசியற்கலைஞர்கள் (அதாவது அரசியல் கலையுலகம்  ரெண்டு சேற்றுலயும் காலை வச்சு காசு பண்றவங்க) அறிக்கை கொடுக்கிறாங்க: 

      ஒருத்தர் முந்தாநேத்தைக்கு: சாதி இல்லை; நேத்தைக்கு: என் சாதிக் கட்சியோட தான் சேருவேன்; இன்னைக்கு: இ.க.பொ.கட்சியில சேந்துட்டேன். நாளைக்கு: சாதி இருக்குங்கிறது இல்லை.

      இன்னொருத்தர் நேத்தைக்கு: நானும் கட்சியும் ஒன்றுக்குள்ள ஒன்று.  இன்னைக்கு: நானே கட்சி. நாளைக்கு: நான் கட்சியிலிருந்து ராஜினாமா செஞ்சி 4 மாசமா ஆச்சே!

      இவங்க மாதிரி நாமும் காசு பண்ண வேண்டாம்?  நாம என்ன ரெண்டு படம் எடுத்தோமா, திருட்டு ரயில் ஏறினோமா? கட்சியாவது தொடங்குவோமே!

      எத்தனை தொகுதில ஜெயிப்பீங்க?
      தோடா! இப்படி கேட்டீங்களே, நீங்களே ஒரு தொகுதிய எடுத்துக்கிடுங்க.  போஃபார்ஸ் பீரங்கிய அனுப்பிச்சி பிரசாரம் செய்திருவோம்.  தேர்தல் செலவு, அய்யாஆ ராசா செஞ்ச ஊழல்நிதியாமில்லே, அதுலேந்து கட்சிச் செலவுகளுக்குக் காசு எடுத்துக்கிடுங்க! உங்க கைக்காசை எங்க ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிருங்க. மறந்துர வேணாம்.


      Wednesday, January 12, 2011

      என் சில ட்வீட்கள் / நான் நல்லவள். நீங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும்!


      .....சிவப்பில் தலைப்பு வகைகள், என் சில ட்வீட்டுகளின் தொகுப்பு  (வரலாறு முக்கியம்பா!)... கெக்கெபிக்குத்துவம்: 
      பூமியின் காந்த துருவங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அப்போ என் magnetic personality என்ன ஆகும்!? #டவுட்டு

      முட்டையை உடைக்காமல் விட்டால் சிக்கன் செய்யலாம். ஆனால், முட்டையும் சிக்கனும் டேஸ்டு ஒண்ணாயிருக்கறதில்லையாமே! #ரோசனை #டவுட்டு

      (ஏன் சிக்கன் சாப்பிட்டதில்லையான்னு கேட்டவங்களுக்கு) இல்லை, தம் முயற்சியால் நகரக்கூடியவற்றை சாப்பிடாமல் விட்டு விடுவது என் வழக்கம்:)

      இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அந்த வெளிப்படையான எண்ணங்களால் பூமியின் எடை கூடுமா? #ரோசனை #ட்வுட்டு

      இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அவர்களின் வெளிப்படையான எண்ணங்களால், அவங்க மூளை காலியாவுதுன்னு தானே அர்த்தம்? #ரோசனை #ட்வுட்டு

      எறுழ்வலி (=Hero): சொல்லி முடிக்கறதுக்குள்ள பல் எயிற்ற்ற்றுவலி. (வாத்திகள் கவனத்துக்கு: வலியில ஒற்று மிக்க்க்கியது)

      அரசியல் கலக்காம தமிழச் சாதியில இருக்க முடியுமா?
      குந்தவை/வந்தியத்தேவன், ராசராசன் அத்தோடு ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன் என்று என் Spectrumஇல் இன்றைக்கு ஒரே குழப்பக் காட்சிகள்.

      திமுகவும் பாமகவும் ஒன்றுக்கொன்று கூட்டணிக்கான “சமிக்ஞைகள்” தெரிவித்துக்கொண்டன: கலைஞர். எந்த சானல்? சென்சார் செய்யப்படாமல் பாக்கலாமா?

      காய்கறி மாலை, கருப்புச் சட்டை, கருப்பு சால்வையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் | திராவிடப் பெருமைகாக்க‌ வெங்காயம் கொண்டுவராததால்

      உதய + நிதி = எழு + திரு = எழுந்திரு. எந்திரின்னு செல்லமா மந்திரிகள் கூப்பிடலாம்:-)

      எளக்கியவியாதி
      @writerpayon புத்தகம் வெளிவந்த பின்: வாசகர் கடிதம், புத்தகங்கள் மறுபதிப்பு கவலை பதிவு என்று எழுத்தாளனுக்கும் கடமைகள் உண்டு. @aayilyan

      @iamkarki என்று சாருவின் இரண்டு காதுகளிலும் ”வைரம்” ஜொலிக்கிறதோ அன்றுவரை தமிழ்ச்சமூகம், எழுத்தாளனை மதிக்காத சமூகம் #சாரு_பிழியாதது

      //சீரோ டிகிரி பத்து வருடங்களாக பதிப்பில் இல்லாமல் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வாசகர்கள் எங்கே போனார்கள்? // நோ கமென்ட்ஸ். #சாரு

      @vNattu அதானே, பசி, நோவுன்னெல்லாம் பணத்தை வேஸ்டு பண்றாங்க சார், பேசாம புக்கு வாங்கலாம்

      ஆஹா, சமகால புத்தகங்களை அரசே வாங்கி இலவசமாகக் கொடுக்க‌ வேண்டும். #மணிக்கு_2000_ரூபாய்_புத்தக_கண்காட்சி_கோல் #சாரு_பிழியாதது

      //ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு புத்தகம் விற்கிறது// சேச்சே, அது எனக்கு ஒரு மணிநேர ஆட்டோ செலவு #சாரு_பிழிந்த‌து

      உலகச் செய்திகள் பத்தி என் உயர்ந்த கருத்துக்கலக்கல்:-)
      நித்யானந்தா அடுத்த இன்னிங்ஸுக்கு தயார் போல! மிகப்பெரிய தொகையிலிருந்து, பெரிய தொகைக்கு செட்டில் செய்திருப்பார்கள்!

      உலகாயதம்: கடோசியில உரிச்சும் ஒண்ணுமில்லாம (அரசு) மாமாவே வச்ச ஆப்புன்னு புரிஞ்சு போகும்னு பேசிக்கிறாங்கப்பா. #விக்கிலீக்ஸ்

      ஏர் இந்தியா: கோ பைலட்டின் அஜாக்கிரதையில் 37000 அடியிலிருந்து ப்ளேன் விழ, பாத்ரூம் சென்ற பைலட் அவசரமாய்.... http://t.co/JVegoop via @cnn

      ஸ்வீடிஷ் பறவைகளைக் கொன்றது அமெரிக்க ராணுவத்தின் "அரூப" பறக்கும் ஊர்திகளா? http://www.bbc.co.uk/news/world-europe-12130940

      இல்லை, அந்த பறவைகள் ஸ்வீடிஷ் வார்த்தைகள் பேச முடியாமல் விக்கித்து மரணித்தனவா?

      தொழில்நுட்பச் செய்திகள் பற்றிய என் குறும் ஆய்வு
      Is this THE hell? :-) | NASA spots tiny Earth-like planet, too hot for life - Yahoo! News http://yhoo.it/hb7ELa

      Possibilities! Whole Mahabharata in small bag in fridge! Hong Kong researchers store data in bacteria - Yahoo! News http://yhoo.it/hUJLkr

      How Stuxnet cyber weapon targeted Iran nuclear plant http://t.co/YTZA5SQ via @AddThis - அரசியல் சைபர் க்ரைம் நாவல் போலிருக்கு!

      தென் துருவத்தில் மறைந்திருக்கும், உலகத்தின் நீளமான‌ டெலஸ்கோப்பின் பின்னிருக்கும் சதி http://goo.gl/EO2Lf :-))))

      ஸ்டீஃபன் ஹாகிங் சென்ற சில வருடங்களில் அந்த கருத்தை மாற்றிக் கொண்டார். கரு>கரி என்று மாடர்னா சொல்லிக்கலாம்...

      மற்றவர் கீச்சியதை நான் மறுகீச்சியது (ட்வீட் = கீச்சு!)
      RT @SalmaanTaseer I was under huge pressure sure 2 cow down b4 rightest pressure on blasphemy.Refused. Even if I'm the last man standing

      RT @hellooooonewman @GivThaDrummaSum Do you ever get down on your knees and thank God you know me and have access to my dementia?

      RT @samugam A positive attitude may not solve all your problems, but it will annoy enough people to make it worth the effort.

      RT @YourAuntLola Sweetie, having a man might boost your self-confidence, but so will half a martini & money in the bank

      ட்வீட்டர் பற்றிய என் பழைய அறிமுகம்: http://kekkepikkuni.blogspot.com/2008/03/blog-post.html

      Monday, January 10, 2011

      பதிவர் சீமாச்சுவுக்கு பதில்: ராசா! இந்தியாவுக்கு என்னாபா நட்டம்?

      சுடச்சுட பதிவர் சீமாச்சு "110. முன்னாள் அமைச்சர் ராசாவால் நமக்கு நஷ்டமா?" பதிவுக்கு  பதில் கொடுக்கணும்னு இங்கே:

      இரண்டு துப்பு இருக்கிறது. ஒவ்வொரு விடியோவையும் முழுக்கப் பார்த்து விடுங்கள்.  ஒவ்வொன்றிலும் துப்பு ஒளிந்திருக்கிறது.

      முதல்ல:

      இரண்டாவது:

       



      நான் பதிவர் சீமாச்சு கிட்ட கேட்டது முன்னாள் அமைச்சர் ராசா மட்டுமே நஷ்டம் ஏற்படுத்தலை, உங்க படிப்புக்கு ஏற்றாற்போல் விரிவாக விளக்கமா பதிவு போடக் கூடாதான்னு. அவர் அப்படிப் போட்டேன்னு சொல்லி எழுதிய பதிவுல ஏகப்பட்ட பெண் ஃபோட்டோக்கள்.

      பொம்பளங்க படம் போட்டு பதிவு ஹிட்ஸ் வளர்க்கிற யாரும் விஷால் மாதிரியோ, சூர்யா மாதிரியோ படம் போடறது இல்லீல்ல, அப்புறம் என்ன?  சரி ஒரு பதிவு முழுக்க இவங்க ரெண்டு பேர் விடியோ போட்டுட்டு போறேன்.

      "இந்தியா முன்னேறி விடும், ஊழல் ஒழிய வேண்டும் என்ற சராசரிக்கு மேற்பட்ட குடிமகனின் தாகம், உழைக்காமல் அனைவரும் அறிந்த தகவல் கொடுத்து,  நடிகை படம் போட்டதில் ஈடேறும்".

      சரி, சரி, இந்த விளையாட்டை இன்னும் வளர்த்த விருப்பமில்ல‌, வீட்டுல பிழைப்பைப் பாக்கணும், பிள்ளங்களைப் படிக்க வைக்கணும். அப்புறம் பார்க்கலாம்.

      எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

      Monday, January 03, 2011

      ஏன் இந்த மாற்றம்? எப்ப இந்த மாற்றம்?

      என்னையும் தொடர் எழுத அழைத்ததுக்கு நன்றி:  பலே பாண்டியா


      முதல்ல கொஞ்சம் கொசுவத்தி:
      சின்ன வயசில பள்ளிக்கோடம் போக மாட்டேன்னு ரொம்ப அழும்பு பண்ணுவேனாம்.  பள்ளிக்குப் போனாலும் அங்கே எல்லோரையும் அடிச்சுத் துவைச்சிடுவேன் (நல்லா நினைவு இருக்கு, விவரம் கேட்டுராதீங்க).  தினமும் ரெண்டாப்பு வரைக்கும் நான் பள்ளிக்கே போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்கேன். எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் எங்கிட்ட பயம் (ஹிஹி). அவங்க ஒரு போலீஸ் உறவினர் கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணினதிலே, அவர் தான் என்னை "கோணி சாக்குல போட்டு உன்னை ஸ்கூலுக்குக் கொண்டு போகட்டுமா?" என்று கேட்டது இன்னும் நினைவில் இருக்கு.  அன்று தொடங்கியது, இன்னைக்கும், ஸ்கூல் பக்கம் போகும் போதெல்லாம் ஒரு பயம்:-)

      மூணாப்புல ஊர் மாறினோம். எனக்கு புது பள்ளிக் கூடத்தில டெஸ்ட் வச்சாங்க.  எனக்கு அப்ப தமிழ் எழுத்துக்கள்ல உயிர்மெய் எழுத்துக்கள் இன்னும் தெரிந்திருக்கலை (ஹிஹி). ரகசியமா விஜயா எனக்கு உயிர்மெய் சொல்லிக் கொடுத்தது! (ஹிஹி).

      மூணாப்புல தொடங்கி பள்ளி இறுதி வரை நல்லாப் படிச்சேன் - எப்படின்னு கேட்காதீங்க, அந்த கோணிச் சாக்கைக் காட்டித் தான் எனக்கு "சாக்கு சொல்ல" முடியும்.  கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கறதிலயும் அப்ப தான் ஆர்வம் நிறைய வந்தது. நாடகம் போட்டிருக்கேன். சொந்தமா நாடகம் எழுதி, அதுக்கு மேடை அமைப்புல ரொம்பவே எனக்கு ஆர்வம் இருந்தது... விளையாட்டுகள்ல அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும், கூடைப்பந்து / பூப்பந்துல ஆர்வம் காட்டிய போது என் ஜாதிப் பெயர் சொல்லி "படிக்கப் போடி!"ன்னு சொல்லிடுவாங்க. நிசமா!:-(

      கல்லூரி வந்தப்புறம், இன்னவோ தெரியல, ஆம்பளப் பசங்க காலேஜில இருந்ததில, (ஹிஹி) நான் அடக்கி வாசிச்சேன்.... வம்புல மாட்டினேனா இல்லியான்னு யாருக்கும் தெரியாத அளவு அடக்கி வாசிச்சேன்:-) இவ்வளவு நல்ல பெண்ணா வளந்திருக்கேன்!

      எனக்கு இன்னிக்கு ரெண்டு புள்ளங்க. சின்னது கொஞ்சம் என்னைப் போல பள்ளிக்குப் போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்குது, ஆனால், பள்ளிக்கூடம் போனவுடனே, எம் புள்ளைங்க‌ நல்லா மத்த புள்ளங்களோட விளையாடிட்டு என்னைய அழ வச்சிடுங்க!

      எம் புள்ளைங்க‌ அமெரிக்கப் பள்ளிகளில படிக்கிறதுனால, கல்வி முறை முழுக்கவே மாறியிருக்கு. எல்லா பாடங்களிலும் ஏன் எதுக்குன்னு கேட்கிறாங்க.  நம் கலாசாரத்தை, இதிகாசங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது, வரலாற்று / அறிவியல் பூர்வமா சொல்ல வேண்டியிருக்கு. இராமன் இலங்கைக்குக் கடலைத் தாண்டுவதற்கு முன் "சமுத்திர ராஜனை வற்ற வைத்து விடுவேன்"னு சொன்னதுக்கு ஒரு நாள் முழுக்க "வற்ற வைக்க முடியுமா", "வற்றினா, மிருக, மீன் இனங்களுக்கு என்ன ஆகும்" என்றெல்லாம் எதிர்வாதம்.  எனவே இப்போதைக்கு எம் புள்ளைங்களுக்கு நான் சொல்வது "உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது எது, ஏன்னு சொல்லிடுங்க, அதைப் பற்றி நல்லா கற்றுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்" என்பது தான்.

      இடையில் இன்னும் ஒரு சின்ன கொசுவத்தி: என் தந்தை கிரகணங்கள் பற்றி, செடிகொடிகள் பற்றி அறிவுபூர்வமாக விளக்கியவர். என்னிடம், "மது, மாமிசம் வேணுமா வேண்டாமான்னு நீயே தீர்மானிச்சுக்கோ" என்றவர்...
      நல்ல வேளையா அவர் கொடுத்த தைரியத்துல இந்த புள்ளங்களை மேய்க்கிறேன்.

      அமெரிக்கப் பல்கலையில் படித்திருக்கேன். பல கண்டங்களிலும் படித்தவர்களுடன் பழகியிருக்கேன், நட்பு பாராட்டியிருக்கேன். இந்தியாவில என் உறவினர்களின் குழந்தைகள் படிக்கிறதைப் பார்க்கிறேன்.  கடந்த பத்து வருடங்களில் அந்த குழந்தைகள் கல்லூரிகளில் நுழைவதையும், வேலை பெற்று வாழ்வில் உயர்வதையும் பார்க்கிறதுல எனக்குத் தெரிந்து தெளிந்தது என்னவென்றால் :

      அப்பா அம்மாவின் முழு ஆதரவும்.. அது கிடைக்கலீன்னா கூட சொந்தச் செலவில தெளிந்த மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில நல்லாத் தான் இருக்காங்க.  "படி, படி"ன்னு சொல்லாமல், எதுக்குப் படிக்கணும்னு தெளிந்து படிக்கிறவர்கள் வாழ்க்கை முழுக்க ஏதோ ஒரு வகையில வெற்றி பெற்றுக் கொண்டே இருக்காங்க.  அதுக்காக, நானும் இந்த வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் வகையான்னு கேட்டுடாதீங்க‌.  எனக்கு இந்தத் தெளிவு இப்பத் தான் வந்திருக்கு, ஸோ, நான் இந்த வகையில இல்லைப்பா!

      அமெரிக்கர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் படிப்பும், இந்தியக் குடும்பங்களின் கூட்டுறவு/அதீத உழைப்பு இவை கண்ணை உறுத்துகின்றன என்று படிக்கிறேன். அமெரிக்கர்கள் சிலர் வாயை விட்டுச் சொல்றாங்க.  அமெரிக்காவின் எதிர்காலம், இந்தியாவில் வசிக்கும்/படிக்கும் இந்தியர்களால் மாற்றி அமைக்கப்படுமோன்னு ஒரு அச்சம் இருக்கு.

      ஆனால், அடிப்படை வசதிகள் (உணவு/நீர், இடம், போன்ற வசதிகள்) இந்தியர்களுக்கு எளிதில் கிடைக்கும் போதும், இந்தியாவில் படித்தவர்களின் விழுக்காடு அதிகமாகும் (அதாவது, மொத்த மக்கள்தொகையில் படிச்சவங்க எம்புட்டு என்கிற விகிதம்) போதும் தான் இந்தியா உலக அளவில் மாற்றம் ஏற்பட வைக்க முடியும்.  படிச்சவங்க / தெளிஞ்சவங்க‌ அதிகமாகும் போது, அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது மனித உரிமைன்னு குடிமக்கள் எல்லோரும் புரிந்து கொள்வாங்க.

      அடிப்படை வசதி கிடைக்காத போது போராடக் கொஞ்சமாவது பரந்தறிவு (பட்டறிவு அல்லது படிப்பறிவு) வேணும். இதற்கப்புறமே, ஏழ்மை, சுரண்டல் இவை சமச்சீர் அடைந்து.... ஸ்ஸப்ப்பா, மூச்சு வாங்கிக்கிறேன்.... கவனிங்க, ஏழ்மையும் சுரண்டலும் முழுசா அழியாதவை; சமச்சீர் அடையும் அவ்வளவு தான்!  எனவே, சும்மா வீட்ல படின்னு சொல்றாங்களேன்னு படிக்காமல், தெளிவோடு படிக்கிறவங்க இந்தியாவிலேயே அடிப்படைக் கட்டமைப்பை உயர்வடைய வைக்கும் போது தான் உண்மையான மாற்றம் ஏற்படும்!

      ஆமினா, பலே பாண்டியா எழுதிய பதிவுகளின் தாக்கத்தில "எனக்குத் தோணியதை" எழுதினேன். உங்க கருத்து என்னன்னு சொல்லிட்டுப் போங்க.  நானும் தெளிஞ்சிக்கிறேன்!

      Thursday, November 04, 2010

      காதல் முக்கோணம்: முதன்முதலில் கண்டுபிடித்தது இந்தியரோ?



      இந்த தமிழ்நாடு மேப்பில, சேலத்திலிருந்து தென் ஆற்காடு போவணும்னா, சேலம்->திருச்சி->தென் ஆற்காடுன்னா, நேரம் ஆயிடுமே! நீங்க சேலத்திலிருந்து நேராப் போவீங்களா, இல்ல சுத்தி வளைச்சுட்டுப் போவீங்களா?




      சரி, பிதோகரஸ் தியரின்னு தான் நீங்க இதைப் பள்ளிக்கூடத்திலிருந்து படிச்சிருப்பீங்க.
      இன்றைக்கு, மகாகனம் பொருந்திய, ஸ்ரீமான் ஸ்டீஃபன் ஹாகிங்ஸ், இந்த கோட்பாட்டை பிதோகரஸ் கண்டுபிடிக்கலை, பாபிலோனில் கி.மு. 570வில் அறியப்பட்டிருந்ததுன்னு சொல்றாரு! பிரபஞ்சத்தப் பற்றி இன்னும் இவருடைய இன்றைய அதிசயத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கவும்.

      யோவ், போதாயனர் அதுக்கு முந்தைய காலத்தவர்! இந்தியாவில் முக்கோணக் கோட்பாடு அப்பவே அறியப்பட்டிருந்தது!!! எனவே இந்த முக்கோணக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் இந்தியர் தான்!

      இந்த முக்கோணத்தில் காதல் எங்க வந்ததுன்றீங்களா?  இல்லயின்னா, பதிவைப் படிக்க வந்திருப்பீங்களா? ;-)

      கணிதத்தின் மேல் எனக்குக் காதல்! அதுனால தான் இப்படித் தலைப்பு:-)

      போதாயனர் பற்றி இங்கே எழுதியிருக்கேன். அந்தப் பதிவின் பின்னூட்டங்களையும் விடாம படிச்சிடுங்க.  அந்தப் பின்னூட்டங்களில், போதாயனர் பற்றி என்னை விடவும் அறிவாளிங்க செய்தி கொடுத்திருக்காங்க.

      Friday, October 15, 2010

      (சவால் சிறுகதை) சவாலுக்கு அப்புறம்!

      டிஸ்கி:
      1. இந்த பதிவு நேற்றைய, இன்றைய, நாளைய எந்த பதிவரையும் குறிப்பதல்ல.
      2. நான் ஒரு ஐயோ பாவம். என்னைப் பற்றி இங்கே கூறப் பட்டிருக்கும் எதுவும் உண்மையோ பொய்யோ அல்ல.

      சுமாராக மூன்று வருடங்களாக காமினி "காதல் மட்டுமே" என்ற ப்ளாகில் அவள் காதலன் சிவமைந்தனோடு தமிழ்ப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறாள்.  சிவமைந்தன் "வாழ்க்கை வெல்வதற்கே"னு தனியா ப்ளாக் வைச்சிருக்காரு (இல்லைங்க, "அந்த சிவா" இல்ல இவர், இந்த விளக்கம் மட்டும் நான் போடலைன்னா, இதுக்கே "அந்த சிவா" மூணு பதிவு போட்டுருவாரே!).

      இரண்டு வருடங்களாக "யாமறிவோம் பரம்"னு ஒரு ப்ளாகர் வந்து காமினியின் பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டம் போட்டிருக்காரு, பார்த்திருப்பீங்க.  இவங்க ப்ரொஃபைல்ல்லாம் பாத்தீங்கன்னா, "ஐடி படிப்பு / தொழில், சென்னை" ன்னு போட்டிருக்கும்.  காமினி ஃபாலோ பண்றது சிவமைந்தன் மற்றும் பரந்தாமன் இவங்க பதிவுகள் மட்டுமே. என்னையெல்லாம் தெரிஞ்ச மாதிரி பதிவுலகத்தில காட்டிக்கக் கூட மாட்டாள்:-(

      பதிவுலகப் பிரபலம் பரந்தாமன் ("யாமறிவோம் பரம்" பதிவு வெச்சிருக்காரே, அவர் தான்!) இவங்க கூட இமெயிலில் சிலபல கும்மி அடிப்பது உங்களுக்குத் தெரியாது.  வருடத்துக்கு சில முறை இந்தியா செல்லும் நான், முடிந்த போதெல்லாம் இவங்களைச் சந்திச்சிட்டு தான் வருவேன்.

      இந்தியாவின் எலக்ட்ரானிக் சூப்பர் ஸ்டாராக விளங்கப் போவதாக பரந்தாமனின் பெயர் "இந்தியன் ஈஈ டைம்ஸ்"இல் வந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம், அவருடைய பதிவுகளில் வந்திருந்தது. அவருடைய செமிகன்டெக்டர் ஓஇஎம் செய்யும் கம்பெனி விரைவில் பப்ளிக் கம்பெனி ஆனால், உலகத்தின் செமிகன்டெக்டர் இன்டஸ்ட்ரியின் பூமத்திய ரேகை இந்தியாவுக்கு இடம்பெயரலாம்...

      பரந்தாமன் பற்றி உங்களுக்கு இன்னும் ஒன்று தெரியாமல் இருக்கலாம். பரந்தாமனின் பின்னூட்டங்கள் வந்தால், ஒரு காலத்தில் நானும் ரொம்ப புளகாங்கிதப் பட்டு அண்ணேன்னு சொல்லிட்டிருந்தது உண்டு. ஏதோ சந்தேகத்தில், அவர் பின்னூட்ட வரலாறு பார்த்த போது தான் தெரிந்தது பரந்தாமன் ஐரோப்பிய, தென் அமெரிக்க ஐபி அட்ரஸ்லிருந்து என் பதிவுகளுக்குச் சில சமயம் பின்னூட்டம் வந்திச்சு. "அண்ணே, சென்னையில நேத்தைக்கு ஒரே மழையாம்ல?"ன்னு பொடி வச்சு நான் பதில் பின்னூட்டம் போடுவேன்.  அவரும் சளைக்காம, "தங்கச்சி, பேய்மழையம்மா!  நீர்வழிகளில் என் கண்வரிகளும் சிலரின் முகவரிகளும் கலைந்து போயின"ன்னு பதில் போடுவாரு....

      சரி, பதிவுலகத்தையே கலக்கிட்டிருக்கும் கதையைச் சொல்லாம, எங்கியோ போறேனே.

      காமினியும் நானும் அப்பப்ப இமெயில் எழுதிக்குவோம். "அக்கா, நான் பி.ஈ. படிச்சு முடிச்சவுடனே, அமெரிக்கா வந்திரணும். சிவாவுக்கு அங்கேயே கட்டாயம் வேலை கிடைக்கும்"னு சொல்லிட்டிருப்பா.  சிவமைந்தன் நெட்வொர்க் எஞ்சினியரிங் லீட்; CCNA பாஸ் பண்ணியிருக்கார். ரெண்டு வருஷமா சென்னையிலியே ஒரு சின்ன ஸ்டார்ட்‍அப் கம்பெனியில் வேலை செஞ்சிட்டிருக்காரு. அப்பப்ப பெங்களூரு, டெல்லின்னு பறந்திட்டிருந்தாலும், காமினியோட காதலும் சிவமைந்தனின் தமிழ்ச்சேவையும் தொடர்ந்திட்டிருக்கே.

      அப்ப தான் திடீர்னு, காமினி கிட்ட இருந்து ஃபோன் வந்திச்சு. நாங்க எப்பவும் ஃபோன்ல பேசிக்கறது இல்லை, ரெண்டு பேரும் ஃபோன் நம்பர் வச்சிட்டிருந்தாலும், ஃபோன்ல பேசி கிழிக்க மாட்டோம், எல்லாம் சாட் தான். அதுனால, காமினி ஃபோன்னதும் டக்னு எடுத்தேன். "க்கா! ழிழா ழிழ்ழழி..." அது கட்டாயம் காமினி குரல் தான்னு தெரியும். திரும்பி ஃபோன் செய்தேன், அவள் எடுக்கலை.  இமெயில், சாட்னு எதிலியும் அவள் இல்லை. அவங்க பதிவுல "ஹே, என்னடி கத்திரிக்கா என்ன  விலை!"ன்னு பின்னூட்டம் கூட போட்டிருந்தேன். பின்னூட்டம் பப்ளிஷ் கூட ஆகலை. அவங்க குடும்ப அட்ரஸ், ஃபோன் நம்பர் தெரியாது.  சரி, நவம்பர்ல என் கம்பெனி ப்ராஜக்ட் விஷயமா இந்தியா கிளம்பணும்னு போட்டிருந்த ப்ளானை கொஞ்சம் மாத்தி, இதோ இந்தியா கிளம்பியாச்சு.  அவங்க பின்னூட்டம் டைரக்டா பப்ளிஷ் பண்ற இமெயிலுக்கு இன்னும் ஒரு ஜோக்கை அனுப்பிச்சேன். 

      இந்தியா வந்தவுடனே, பரந்தாமன் சாரைக் கூப்பிட்டேன். அவரு தான் சொன்னாரு, 'காமினியும் சிவாவும் மாமல்லபுரம் சேந்து போயிருக்காங்க, ஒரு ஆக்சிடென்ட்ல ரெண்டு பேரும்  மாட்டிகிட்டாங்க. காமினி ஹாஸ்பிடல்ல இருக்காங்க, சிவாவுக்கு அவ்வளவு காயம் படலை. ஆனாலும் சிவாவும் காமினியை கவனிச்சிட்டு ஹாஸ்பிடல்ல இருக்காரு"ன்னுட்டு. நேரா ஆஸ்பத்திரி போனேன்.

      நல்ல வேளை "விசிட்டர் அவர்ஸ்"ல தான் போனேன். சிவா டாக்டர் கிட்ட பேசிட்டிருந்தார்.  முதுகும் முகமும் உயர்த்தி வைக்கப் பட்டு, படுத்துக் கொண்டு காமினி முகத்தில் ஸீத்ரு மாஸ்க் சிறியதாக இருந்தது,  கைகளில் வயர் பிணைக்கப் பட்டிருந்தது.   ஆனால், காமினி முகத்தில் என்னைப் பார்த்ததும் மாற்றம் தெரிந்தது. அவள் கண்களில் பயம் தெளிவாகத் தெரிந்தது. உள்ளே போகாமல் தயங்கினேன். என்னைப் பார்த்த சிவா அவசரமாக வெளியே வந்தார். டாக்டரிடமும் சிவாவிடமும் நான் பேசத் தொடங்கிய போது தான் உள்ளே அது நிகழ்ந்தது.

      டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். 

      டாக்டரும் சிவாவும் காமினி இருந்த அறைக்கு முதுகைக் காட்டிப் படுத்திருந்தமையால் அவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை(ன்னு நினைச்சேன்).  நான் முகத்தில் மாற்றம் ஏதும் காட்டாமல் பேசிக் கொண்டிருந்தேன்.  பரந்தாமன் தயாராக வெளியே காருடன் இருந்தார்.  அவர்கள் கிளம்பியதும், எனக்கு டெக்ஸ்ட் அனுப்புவார்கள், நான் தப்பிப்பதாக ப்ளான்.  மயிலாப்பூரில் நான் தங்கும் ஹோட்டலுக்கு வந்த காமினியும் பரந்தாமனும் என் அறைக்குப் போய் காத்திருப்பார்கள் என்றும் ப்ளான்.  நடந்தது.

      ஆனால், என் பின்னாலேயே சிவா தொடர்ந்து வருவது தெரியாமல் போய் விட்டது.  உட்லண்ட்ஸின் மாடிப்படிகளில் இருந்து வெளி வந்து என் அறைக் கதவைத் திறக்கும் போது திடீரென்று சிவா என்னையும் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான். வந்தவன், "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.  "எல்லாம் ஆளாளுக்கு ப்ளான் போட்டு தான் வந்திருக்கீங்க. இதுல காமினியும் உடந்தைன்றது தான்... சே!" என்றான்.

      எனக்கு வந்த கோபத்தில் அறைந்திருப்பேன், எங்கியாவது அந்த நாதாரி சுட்டுத் தொலைத்து விட்டால்?

      என்றாலும், க்ளாசட்டிலும் பாத்ரூமிலும் ஒளிந்திருந்த போலிஸ் வெளிவந்ததும், காமினியின் நெற்றிப் பொட்டில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டியே பயமுறுத்தி சிவா வெளியேறத் தொடங்கியதும், நான் பாய்ந்து துப்பாக்கியைத் தட்டி விட்டதும்....,  சிவா சுட்டதும், என் தோளில் துப்பாக்கி ரவை கொதித்ததும், ஓரு சில விநாடிகளுக்குள் நடந்து முடிந்தது.  பரந்தாமனின் சென்னை போலீஸ் தொடர்புகள் மூலமாக எல்லாம் சீக்கிரம் முடிந்தன.  சிவாவை போலிஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டது.  வெறும் தோளின் மேல்பாகத்தில் பட்டுக் கொண்டு போன ரவையையும் காயத்தையும் சுத்தம் செய்து, உடனடியாக டாக்டர் கிட்ட முதலுதவி செய்து கொண்டோம் (இல்லை, உட்லண்ட்ஸ்க்கு பக்கத்தில் "வேற" டாக்டர்:-). 

      காமினி மெதுவாக, அவள் சல்வாரின் பாக்கட் (இப்ப அப்படியும் தைத்துக் கொடுக்கறாங்க டோய்!) டிலிருந்து டயமண்ட் செமிகண்டக்டர் சிப் ப்ரோடோடைப்பை வெளியே எடுத்தாள்.   “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

      ஹிஹி, நான் யாரென்று பொதுவாக பதிவுலகத்தில் சொல்லுவதில்லையே! சென்னை ஐஐடியில் படித்த மாணவி, என் பிஹெச்டியை பெர்க்லியில் முடித்து அங்கேயே சிலபல கம்பெனிகளைத் தொடங்கி, ஏராளமாக பணம் சம்பாதித்து,  எலக்டிரிக் காருக்கான கன்ட்ரோல் மாட்யூலின் மாஸ் ப்ரொடக்ஷனுக்கான ஆராய்ச்சியில் இருக்கிறேன்.  "அதிக மின்சக்தியை தாங்கக் கூடிய செயற்கை வைரத்தால் செய்த மைக்ரோசிப் மூலமாக இந்த கன்ட்ரோல் மாட்யூலை"ச் செய்ய, பரந்தாமன் சாரின் உதவியை நாடிய போது, சிவமைந்தனுக்கு அது தெரிய வந்தது.

      சிவாவிடம் இந்த TOR பற்றிக் கற்றுக் கொண்ட பரந்தாமன், என்னை முட்டாளாக்குவதாக நினைத்துக் கொண்டு ப்ராக்ஸி ஐபி வழி பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.  பரந்தாமனின் சிஸ்டத்தில் TOR மட்டுமல்லாமல், கீபோர்டு லாகர் முதற்கொண்டு இன்ஸ்டால் செய்திருக்கிறான் சிவா!

      அந்த சமயத்தில் தான், சிவா என் கம்பெனி நெட்வொர்க்கில் ஹாக் செய்ததை கவனித்தேன்.  சிவாவின் தவறான வழிகளைப் பற்றி, காமினியிடமும் பரந்தாமனிடமும் பேசினேன்.  சிவாவின் இமெயில்களை, காமினி பெற்றுத் தந்தாள்:‍-)  அதிலிருந்து, இந்த செயற்கை வைர ஆராய்ச்சியில் எங்கள் முன்னேற்றம் பற்றி சிவா அமெரிக்க டெக்ஸாஸைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு விவரம் அளித்தது தெரிய வந்தது.

      (அவனுக்கு ஜப்பானின் ட்ஸுகுபா / Tsukuba தொழில் நுட்ப ஆராய்ச்சித் தொழிலகத்தில் செய்த ஆராய்ச்சித் தாள்கள் என்று நான் பொய்யாய் ஒரு எலிப்பொறி வைத்ததில் மாட்டி, அவன் அந்த ஆராய்ச்சித் தொழிலகத்தின் நெட்வொர்க்கில் நுழைந்ததும் பழங்கதை.  அவன் அந்த நெட்வொர்க்கில் நுழைந்தது எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா?  உங்கள் தொழில் நுட்பப்பதிவுகளில் கார்கி, லீலா என்றெல்லாம் பெயர்களில், ஜப்பான் / ஐரோப்பிய ஐபி அட்ரஸில் வந்து பின்னூட்டம் இடுவது யார் என்று நினைக்கிறீர்கள்? ;-)


      ஹிஹி

      Saturday, October 02, 2010

      எந்திரன்: சிறுகுறிப்பு

      ரஜினி ரசிகர்கள், அல்லாதோர் இரண்டு வகையினருக்கும் விமர்சனம் இருக்கு இங்க!

      ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்.

      தலைவருக்கு வில்லன் வேஷம் என்றால் அடித்து தூள் கிளப்பிடுவார். இந்தப் படத்தில் வெடிச் சிரிப்பென்ன, சுழன்று அடிக்கும் சண்டை சீன் என்ன, நடை என்ன, ஐஸ்வர்யாவிடம் கடைசி சீன்களில் அடிக்கிற ஸ்டைல் பேச்சென்ன, தலைவர் தலைவர் தான். ஷங்கரின் பிரமாண்டம் நன்றாகவே தெரிகிறது. பாடல்கள் சிலவற்றை, மக்கள் கூடவே பாடியதும், தாளம் போட்டதும், சூப்பர். ரசிகப் பெருமக்கள் அள்ளிப் போட்ட துண்டுக் காகிதங்களூம் பாப்கார்ன் தூளும் அமெரிக்கத் திரையரங்கத் துப்புரவாளர்களுக்குக் கொஞ்சம் அதிசயமாகவே இருந்திருக்கலாம்.

      ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்.

      இதுவரைக்கும் படிச்ச ரஜினி ரசிகர்கள் நடையைக் கட்டுங்கப்பு:‍-)

      யோவ், படமாய்யா இது? அவரு வயசு இப்படி மேக்கப்புப் பெயின்டையையும் மீறிட்டுத் தெரிது, க்ளோஸப்ல, அந்தம்மாவை விட இவரு லிப்ஸ்டிக்கு ஜாஸ்தியாப் போட்டிருக்காப்ல தெரிது. பேசாம, தலைவருக்கு ஐஸ் அஸிஸ்டென்டுன்னு கதாபாத்திரமாக்கிட்டு, எந்திரனா நடிக்கிறவரு கொஞ்சமாச்சும் இளந்தாரியாப் போட்டிருக்கலாம். அந்தம்மா நடிப்பு.... இன்னும் கொடுமை. எங்கிட்டு போய்ச் சொல்றது?

      கம்ப்யூட்டர் ஜிகினா வேலை கொஞ்ச இடத்துல பல்லை இளிக்குது.

      எப்பவோ படத்தை முடிச்சிருக்கணும்யா. இழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழழ்ழ்ழ்ழ்ழ்ழுத்துக்கிட்டுப் போவுது, எந்திரன் பாம்பு, தவளைன்னு அவதாரம் எடுத்துட்டு வரும்போது, கொட்டாவியா வந்திச்சு.  ஆமா, இம்புட்டுப் பெரிய விஞ்ஞானிக்கு வைரஸ் வைக்க முதல்லியே தோணலியா?

      சின்னப் பசங்க கேட்ட கேள்விகள் அதுக்கு மேல: (அ) ஐஸ் ட்ரெயினில் ரவுடி மக்கள் கிட்ட மாட்டிகிட்டு, அவங்க கொடூரச் சிரிப்போட, ஃபோனை எடுத்துட்டு வரும்போது ஃபோட்டோ எதுக்குன்னு புள்ளைங்க கேட்டாங்க‌:-(( (ஆ) 'ஓஹோ, இப்படித் தான் குழந்தை பிறக்குமா'ன்னு கேட்டாங்க! (இ) எம் பசங்க "எப்ப அம்மா படம் முடியும்?"ன்னு இடைவேளைக்கு அப்புறம் ரொம்பவே கேட்டாங்க‌.

      வந்தது வந்தீங்க, படத்தைப் பத்தி, உங்க கருத்தையும் சொல்லிட்டுப் போங்க!

      Friday, August 13, 2010

      மயங்கி விழுந்த நடிகர் கர்ப்பமா?

      ஹீரோ நடிகரோடு 10 ஸ்டண்ட் நடிகர்கள் கலந்துகொண்டார்கள். ஸ்டண்ட் நடிகர்களுடன் ஹீரோ மோதுவது போன்ற சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஹீரோ மயங்கி விழுந்தார்.

      இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. ஹீரோ முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிப்பதற்கு குளுக்கோஸ் கொடுத்தார்கள். அதன்பிறகு அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.

      சிகிச்சைக்குப் பின்னர் உடல் தேறிய ஹீரோ கூறுகையில், "உடல் எடையை குறைப்பதற்காக, நான் கடந்த ஒரு வாரமாக உணவில் மிகவும் கட்டுப்பாடாக இருந்து வருகிறேன். தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறேன். நேற்று காலையில் எதுவும் சாப்பிடாமல் படப்பிடிப்புக்குச் சென்றேன்.

      அது, ஒரு பெரிய, ரிஸ்க்கான சண்டை காட்சி. திடீரென்று தலை சுற்றுவது போல் இருந்தது. மயங்கி விழுந்து விட்டேன். சிகிச்சைக்குப்பின் நன்றாக இருக்கிறேன்...", என்றார்.

      வளர்ந்து வரும் நடிகர் என்பதால், 'ஜாக்கிரதை'யாக இருக்க வேண்டாமா?

      நகைச்சுவைக்கு மட்டுமே! சமூக அவலம், பெண்ணீயம் எதுவும் இல்லை.

      Friday, July 30, 2010

      தாய் வழித் தோன்றல்

      என் பட்டங்களை நீ
      சுவரில் மாட்டியதில்லை.
      என் தோல்விகளால் என்னைத்
      துவள விட்டதில்லை.
      என் பசியும் ருசியும்
      என்னை விட உனக்கே தெரியும்.
      என்றாலும்,
      என் வாழ்க்கை அமைய
      நீ வழியே சொன்னதில்லை.
      உன் மக்களுக்கு
      ஒவ்வொரு நொடியும்
      ஈன்ற பொழுதினும் பெரிதே
      செய்தாய்.

      என் மக்களின் பட்டங்கள்
      சுவர்களில் சட்டங்களில்.
      ஆனாலும் தோல்விகளால்
      அவர்களைத் துவள விட்டதில்லை.
      என் மகள்களின் பசியும் ருசியும்
      அவர்களை விட எனக்கே தெரியும்.
      என்றாலும்
      அவர்கள் வாழ்க்கை அமைய
      நான் வழியைச் சொல்ல மாட்டேன்.
      என் மக்களுக்கு
      ஒவ்வொரு நொடியும்
      ஈன்ற பொழுதினும் பெரிதாய்ச்
      செய்வதை விட
      வேறென்ன இருக்கிறது?