என் பட்டங்களை நீ
சுவரில் மாட்டியதில்லை.
என் தோல்விகளால் என்னைத்
துவள விட்டதில்லை.
என் பசியும் ருசியும்
என்னை விட உனக்கே தெரியும்.
என்றாலும்,
என் வாழ்க்கை அமைய
நீ வழியே சொன்னதில்லை.
உன் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதே
செய்தாய்.
என் மக்களின் பட்டங்கள்
சுவர்களில் சட்டங்களில்.
ஆனாலும் தோல்விகளால்
அவர்களைத் துவள விட்டதில்லை.
என் மகள்களின் பசியும் ருசியும்
அவர்களை விட எனக்கே தெரியும்.
என்றாலும்
அவர்கள் வாழ்க்கை அமைய
நான் வழியைச் சொல்ல மாட்டேன்.
என் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதாய்ச்
செய்வதை விட
வேறென்ன இருக்கிறது?
சுவரில் மாட்டியதில்லை.
என் தோல்விகளால் என்னைத்
துவள விட்டதில்லை.
என் பசியும் ருசியும்
என்னை விட உனக்கே தெரியும்.
என்றாலும்,
என் வாழ்க்கை அமைய
நீ வழியே சொன்னதில்லை.
உன் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதே
செய்தாய்.
என் மக்களின் பட்டங்கள்
சுவர்களில் சட்டங்களில்.
ஆனாலும் தோல்விகளால்
அவர்களைத் துவள விட்டதில்லை.
என் மகள்களின் பசியும் ருசியும்
அவர்களை விட எனக்கே தெரியும்.
என்றாலும்
அவர்கள் வாழ்க்கை அமைய
நான் வழியைச் சொல்ல மாட்டேன்.
என் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதாய்ச்
செய்வதை விட
வேறென்ன இருக்கிறது?