COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, July 30, 2010

தாய் வழித் தோன்றல்

என் பட்டங்களை நீ
சுவரில் மாட்டியதில்லை.
என் தோல்விகளால் என்னைத்
துவள விட்டதில்லை.
என் பசியும் ருசியும்
என்னை விட உனக்கே தெரியும்.
என்றாலும்,
என் வாழ்க்கை அமைய
நீ வழியே சொன்னதில்லை.
உன் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதே
செய்தாய்.

என் மக்களின் பட்டங்கள்
சுவர்களில் சட்டங்களில்.
ஆனாலும் தோல்விகளால்
அவர்களைத் துவள விட்டதில்லை.
என் மகள்களின் பசியும் ருசியும்
அவர்களை விட எனக்கே தெரியும்.
என்றாலும்
அவர்கள் வாழ்க்கை அமைய
நான் வழியைச் சொல்ல மாட்டேன்.
என் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதாய்ச்
செய்வதை விட
வேறென்ன இருக்கிறது?

இன்றைத் திங்கள் நாளைக்கும் பூக்குமென்று...

கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா
எந்த அலை தன்னைத் தொடும் என்று?
எது கிழக்கு, எது மேற்கு என்று?

கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா
நேற்றைய போலாரிஸும் இன்றைய தென் துருவமும்?

கால அலைகளின் ஆட்டங்களில்
மானுடர்களின் வாழ்க்கைக் கனவுகள்.
எந்த அலை அடிக்கும்,
எந்த அலை தாலாட்டும்?

இன்றைக்கு முளைக்கிற வெள்ளி
நாளைக்கும் என்று
கைக்கெட்டா விண்மீனாய் ஒளிரும் நம்பிக்கைகள்.