COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, April 24, 2009

கைப்பை பற்றியதல்ல‌

அப்பவும் இப்பவும்
கண்மை வளர்க்கவும், அடையாளங்கள் தொடுக்கவும்,
என் கைப்பையில் பலவும் உண்டு.

எப்போதோ காதல் தருணத்தில்,
அழகின் சின்னமான கைப்பை.
"என்ன ரகசியம் வச்சிருக்கே
இந்த கைப்பையில்?"

இன்றைக்கு
குழந்தைக்குப் பிடித்த தின்பண்டம் மட்டுமல்ல,
அவன் தின்று போட்ட இனிப்பும்
ஒட்டிக் கொண்டு....
"அம்மா பையில வச்சிடு"

நாளைக்கு, கைப்பையில்
அவருக்கும் எனக்குமாய்
மருந்தும் இருக்கலாம்;
கண்மை கைப்பையில் இருந்து
காணாமல் போகலாம்.

வெவ்வேறு நிறங்களில், விதங்களில்
கைப்பை மட்டும் வரும்
அப்பவும் இப்பவும்.

Friday, April 10, 2009

50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்னைகள்

பெண் பதிவர்களுக்கு - கணிணி சார்ந்த பதிவர்களோ, இல்லை எதுவானாலும் - இந்த தொல்லை தாங்க. உலகம் முழுக்க!!!!

வெள்ளி காலை நான் படிக்கும் ஒரு கணிணி இதழில் வந்த கார்ட்டூன் இது. ஒரு பெண் பதிவர் ஒரு செய்தியைச் சொன்னால், அந்த செய்தியை விட அந்தம்மா "என்னா ஃபிகர்" என்று கவலைப்பட ஒரு கூட்டம் இருக்கு.... இருக்காம்!!!



இந்த மாதிரி இல்லாத உங்களைப் போன்ற‌ நல்ல பதிவர்களுக்கு மொழியாக்கம் தேவையில்லை என்பதால, தமிழ்ல கொடுக்கலை.

:-)

_/\_ நன்றி/Thanks To: http://www.xkcd.com/322/ _/\_

புரியாத பெண்கள் - 3

இந்த வாரம் ஒரு சில தோழிகளின் அனுபவ, மற்றும் கருத்துக்களின் கலவைத் தொகுப்பாக ஒரு கற்பனைப் படைப்பு.

புரியாத பெண்கள் - 1
புரியாத பெண்கள் - 2

எங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பெர்ட் (நாய்) 'ரின்டே'வை அதன் காலைக் கடன்களுக்காக நான் கூட்டிக் கொண்டு வெளியே சென்ற போது, பூஜா ஒரு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து “ஹாய்” என்று தொடங்கியது எங்கள் அறிமுகம் ('ரின்டே'வை நான் நாய் என்று சொன்னது என் கணவர் ராஜாமணிக்கு தெரிந்தால், அவ்வளவு தான்:-).

பூஜாவுக்கு இரண்டு மகன்கள், 3வயசு & 5வயசில். என் குழந்தைகள் சிறிது பெரியவர்கள் என்றாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எங்க நட்பு கொஞ்சம் மெதுவா வளர்ந்தது.... என் பிள்ளை கண்ணன் அந்த பசங்களைப் பார்த்தாலே நிண்டெண்டோ விளையாட்டு சாமான்களை அவசரமாய் மறைத்து வைப்பான். பூஜாவின் குழந்தைகள் பேப்பரைக் கிழித்து சிறுசிறு துகள்களாய்ப் போடுவது, விளையாட்டுப் பொருட்களை உடைத்து வைப்பதுன்னு நிறைய சேதம் செய்து கொண்டிருந்தார்கள். பூஜா தன் பிள்ளைகளைக் கண்டிக்காமலும், சுத்தம் செய்யாமலும் கூட்டிக் கொண்டு போய் விடுவாள்.

பூஜாவின் கணவன் வேறு, அவ்வப்போ, “உங்க வீடு எங்க வீட்டை விடச் சின்னதோ?”, “உங்க வீட்டு பழைய ஓனர் சுருட்டு பிடிச்சிருப்பாரோ?”, “உங்க வீட்டு சோஃபா மாதிரியே எங்க கிட்ட இருந்தது, அசிங்கமாயிருக்குன்னு போன வருஷம் தான் தூக்கி எறிந்தோம்” என்றெல்லாம் ஊக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்:-)

பூஜா, "செயின்ட் லூயிஸ்" நகரத்துக்கு ஒரு வார இறுதிப் பயணம் போயிட்டு வரலாம்னு சொன்னதால‌, எல்லாருமா போனோம். ஊர்ச் சுற்றி விட்டு சனி இரவு அன்று, சாப்பிட்டு முடித்தபின் நாங்கள் - பூஜா, அவள் கணவர் சூர்யா, நான், ராஜாமணி - வாடகைக்கு எடுத்திருந்த டவுன்ஹவுஸில் வெட்டிப் பேச்சுக்காக அமர்ந்தோம். நாள் முழுக்க போட்ட ஆட்டத்தில், குழந்தைகள் எல்லாருமே தூங்கி விட்டிருந்தனர். அப்போது, கோடிக் கணக்கில் மதிப்புள்ள வீடுகள் அடையாறிலும் தஞ்சையிலும் தங்களுக்கு சொந்தம் என்று பூஜா சொன்னாள். எனக்கு அது புது நியூஸ்.

“கடவுள் நம்பிக்கை இருக்கா?” என்று பூஜாவின் கணவர் சூர்யா தொடங்கினார்.

“இல்லைன்னு சொல்ல மாட்டேன்... நம்மை மீறின சக்திக்கு, அது மக்களின் சக்தியாகவே இருக்கலாம், அதை கடவுள்னு சொல்லுவதில் தப்பு என்ன‌?” என்று சிரித்தேன் நான். மனிதர்களே கடவுள், அதுனால உருவ வழிபாட்டுல தப்பு இல்ல என்பது என் கட்சி. ராஜாமணி தீவிர அனுமான் பக்தர். பேசாமல் சிரித்த ராஜாமணியைப் பார்த்து நான் ஒரு புன்முறுவல் கொடுத்தேன்.

“கடவுள்னா யாரு? நம் உருவகம் தானே? மதம் மக்களைக் கட்டிப் போடத் தானே பிறந்தது?” இது பூஜா.

“கடவுள் நம்பிக்கை நமக்கு ஒத்து வந்தால் அதை பின்பற்றலாம் - மனுசங்க, மிருகங்களுக்கு தொல்லை இல்லாத பட்சத்தில்! கணக்கு, அறிவியல்னு எல்லாத்துக்கும் கட்டமைப்பு இருக்கறதுனால, மதம் இருப்பதில் தப்பு இல்லை - அது யாரையும் ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. எதுவானாலும் ஒரு உயிர் இன்னொரு உயிரை விடத் தாழ்வுன்னு சொல்லவே கூடாது” என்று நான் சொன்னேன்.

“திரௌபதிக்கு எத்தனை கணவர்கள்? க்ருஷ்ண அவதாரத்தில் எத்தனை மனைவிகள்? யப்பா! இதெல்லாம் சரியா?” என்றாள் பூஜா. இன்னும் மேலோட்டமாக நிறைய புராண கேள்விகள் சூர்யா கேட்டார். இப்ப யோசித்தால், இதே வரிகளைச் சொல்லித் தான் அவங்க எல்லாரிடமும் மார்க்கட்டிங் தொடங்கியிருப்பாங்கன்னு நல்லா புரியுது.

பேச்சு திசை மாற, மாற, ஒரு வழியாய், பூஜா விஷயத்துக்கு வந்தாள். ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து , “ஸ்ரீஅப்பன் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று ராஜாமணிக்கு அருகில் அமர்ந்தாள்.

“உங்க வீட்டு கெட்-டுகேதர்ல ஸ்ரீஅப்பன் படம் பாத்திருக்கேன். அவரைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே” - இது ராஜாமணி. தமிழ் இணையத்தில் மூழ்கி முத்தெடுத்த எனக்கு ஸ்ரீஅப்பன் பற்றி நன்றாகவே தெரியும். பெயர் பெற்ற “குருஜி”. ஓரிரு கொலை வழக்கில் மாட்டினார், கொலை வழக்குகளும் மாண்டு போயின. இப்ப பக்தி மார்க்கம் பற்றி சிடிக்கள் நிறைய வெளியிடுகிறார், மார்க்கெட் போன பல இந்திய பிரபலங்களுக்கு அருள் பாலிக்கிறார், ஸ்ரீஅப்பன் விடியோக்களில் அவர் தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தானாய் உண்டாகிறது... இப்படி எனக்கு நிறையவே தெரியும், ராஜாமணிக்கு என்னை மாதிரி வம்பு தெரியாது:-)

ஸ்ரீஅப்பன் பற்றி, தலையைச் சாய்த்து கண்கள் படபடக்க தலைமுடியைச் சுருட்டிச் சுருட்டி, பூஜா சொன்னது அதிகம். அவர் பிறந்த அன்றே காக்கை கூவியது, மயில் அகவியது, ஆமை அலறியது. அவர் பள்ளிக்குப் போய் தனக்குப் பாடம் சொல்ல வந்த‌ வாத்தியாருக்கெல்லாம் பாடம் எடுத்தார். இறைவன் அவருடைய கண் முன்னே இரண்டு முறை வந்து ‘உலகை மாற்று’ என்று ஆணை இட்டார். முதல் முறை கேளாமல் இருந்தாலும், ஸ்ரீஅப்பன் இரண்டாம் முறை தம் ஆன்மிகப்பயணம் தொடங்கினார். ‘ஓஹோ அதுனால தான் அவரு ரெண்டு முறை கண்ணாலம் கட்டிகிட்டாரு’ என்று கேட்க நினைத்து, “அவர் கல்யாணம் ஆனவர்ல?” என்றேன் நான்.

திரும்பி என் கண்களைச் சந்தித்த பூஜா, “கல்யாணம் செய்யாத ரிஷிபுங்கவர்கள் கிட்ட பிள்ளைங்களைப் படிக்க யாரும் நம்பி அனுப்புவதில்லை. கல்யாணம் ஒரு சடங்கு தான் சுமா! நீ உன் பார்வையை மாத்திக்கணும்” என்றாள். எனக்கு பயமாய் இருந்தது. ஜூஸில் வேறு ஏதாவது கலந்திருக்குமோ?

நான் பலமுறை “வேண்டாம்” என்று சொல்லியும், பூஜாவும், சூர்யாவும் ராஜாமணியிடம் ஸ்ரீஅப்பனின் உலகளாவிய கோவில்களை வெப்சைட்டில் காட்டி, இரண்டு ஆன்மிக வகுப்புகளுக்கு பணம் வாங்கிக் கொண்டார்கள் - ஆயிரம் டாலர் அநாவசியச் செலவு:-( அடுத்த இந்திய பயணத்தின் போது அவர்களின் இந்திய மையங்களில் வந்து தங்கிப் போனால் $5,000இல் அமைதி கிட்டும் என்றும் சூர்யா சொன்னார். பின்னர், ராஜாமணி சிரித்தவாறே, “எதுக்கு போன ராமநவமிக்கு ராமர் படத்துக்கு சூடம் காட்டி, பானகம் நீர்மோர் செஞ்சீங்க?” என்றான்.

அதன்பின், வேறொரு நாள் என் சின்ன பிள்ளையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த‌ பூஜா, அங்கு வந்திருந்த‌ எல்லாருக்கும் இந்த ஆன்மிக அனுபவங்களை விற்க முனைந்தாள். “இல்லம்மா, நான் இன்னொரு அநாதை ஆசிரமத்துக்கு மாதந்தோறும் கொடுக்கிறேன்” என்ற வெள்ளைத் தோழியிடம் பூஜா சொன்னது டாப்: “அந்த ஆசிரமத்து நம்பர் கொடுங்க. அவங்க எங்க டிக்கட்டுகளை விற்றால், உங்கள் ஆசிரமத்துக்கு ஒரு கட் கொடுக்கிறேன்”. ஸ்ரீஅப்பனின் 'ஸ்ரீமோட்சா' கூட்டத்தில் இந்த கமிஷன் அவரவர் சீனியாரிட்டி பொறுத்ததாம்.

நாங்க விலை கொடுத்த ஆன்மிகத்தை வாங்கிக் கொள்ள ஸ்ரீஅப்பன் ஆசிரமத்துக்குப் போகவே இல்லை. "ஸ்ரீஅப்பன் அமெரிக்கா வராரு, 6,000 டாலர் கொடுத்தீங்கன்னா, இரண்டு நாள் அவருடன் தங்கலாம், எல்லாருக்கும் சிடி கொடுப்பாரு"ன்னு ஒருமுறை பூஜா ஃபோன் செய்தப்போ, 'இனி என்னைக் கூப்பிடாதே'ன்னு சொல்லிட்டேன்.

'ஆம்வே' சுட்ட ஆம்லெட்டை கொத்து பரோட்டா ஸ்டைல்ல‌ சுடறாங்கப்பா...!

Wednesday, April 01, 2009

ஏப்ரல் 1ம் தேதி கலக்கல்ஸ்! (யூட்யூப் Flip ரகசியமும்:-)

ஷைலஜா, பினாத்தல்ஸ்னு நிறைய பேரு இன்னிக்கு ஏப்ரல் 1ம்தேதிக்காக‌ பதிவு போட்டுருக்காங்க. அவங்களைப் பாராட்டிட்டு, எப்பவும் போல நல்ல நாலு பாட்டு (சாருலதா அம்மிணி) பாக்கலாம்னு யூட்யூப்ல இன்னிக்கு 'Upside Down Show!'.

எல்லாம் தலைகீழ். அவங்க இந்த தலைகீழ் எஃபக்ட் மாத்தறதுக்கு முன்னே ரெண்டே ரெண்டு உங்களுக்காக எடுத்த ஸ்க்ரீன் காப்சர் (ரப்சரு!)


விஜயகாந்து படம் (வாழ்நாள்ல இதுவரை அவர் திரைப்படம் ஒண்ணு முழுக்க முடிய சத்தியமா பாத்ததில்லை) ஏதாச்சும் தலைகீழா பாத்து "ரசிக்கலாம்!"னு உங்களுக்கு தோணிச்சுனா, இத காப்பி/பேஸ்ட் செய்யுங்க‌: http://www.youtube.com/watch?v=9FFDKlHczqM&flip=1

யூட்யூப் விடியோவின் சுட்டி (எந்த சுட்டியானாலும்) அந்த "&flip=1" ஐ (without quotes) கடைசில சேத்தீங்கன்னா, ஐஸ்வர்யா ராய்கூட தலைகீழா ஆடலாம்.


ஜிமெயில் திறந்தா, "என்ன கொடுமை இது ஜிமெயில்?"
ரூம் இல்ல, பங்களாவே போட்டு யோசிச்சிருக்காய்ங்க.



குசும்பன் சாரை நட்சத்திரப் பதிவரா நாள் நட்சத்திரம் பாத்து தான்யா போட்டுருக்காங்க!