COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, September 14, 2013

எல்லாமே மென்பூக்கள்....


வார்த்தைகளில் சிக்கியே
காணாமல் போகின்றன...
வார்த்தைகள்.

காரின் வேகத்தில் பின்வாங்கும்
சாலையோரச் செடிகளின் பூக்களில்,
நில்லாமல் தாவிச் செல்லும்
பட்டாம்பூச்சியோடு
பின்தங்கி  நின்றுவிட்டது மனம்.

தொட்டாற்சுருங்கி என்று தெரிந்ததும்,
மிதித்துச் சுருங்குவதைச்
சரிபார்க்கும் கோழைமனம்.

இருந்த சுவடு தெரியாமல்,
கட்டிய கோலம் காணாமல்,
இன்றைய இருப்புக்கு மட்டுமே அடையாளமாய்.
மேகங்களைப் போலாகி விட்டது
வாழ்க்கை.