COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, January 31, 2011

சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை

ஜனவரி 31, 2011 அன்று வெளியான சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை:

தலைப்பு: பிஸ்கட்டு, பழம்! இணைப்பு: http://solvanam.com/?p=12746

அந்த கதையோட வெளியான படத்தில் இருக்கும் நாற்காலி பத்தியும் எனக்கு ஒண்ணியும் தெரியாது, சொல்லிட்டேன். நீங்க எனக்கு பிஸ்கட்டு பழம் கொடுக்கலைன்னாலும், ஒரு நாலு வார்த்தை (or more) கதை எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டுப் போனா, போகிற காரியம் நல்லபடியாகும்;-)

Wednesday, January 19, 2011

புதிய கட்சி தொடக்கம்

அகில உலக அளவில் தொடங்கப்பட்ட இந்த கட்சியைப் பத்தித் தெரிந்து கொள்ள ஆசையா வந்திருக்கீங்க.  வாங்க! வணக்கம். 

கொள்கை?
  • கேப்பையில் வடியும் நெய்யை விற்று பெரிய கோடீஸ்வரன் ஆவணும்.
  • நாட்டுக்கு நல்லது செஞ்சி, ஏழ்மையை ஒழிச்சி, பெண்ணடிமை... இப்படியெல்லாம் நடக்கும்னு நம்புறவங்களை கட்சி மெம்பராக்கிக் காசு பாக்கணும்.
கட்சியில மெம்பராவது எப்படி?
தமிழ்ச் செய்தி படிப்பீங்களா?  அப்ப நீங்க ஏற்கெனவே மெம்பர் தான்? என்ன, இனிமே ஒழுங்கா மெம்பர்ஃபீ (அடச்சே, உறுப்பினர் உரிமைக்கட்டணம்) ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிச்சிருங்க.

ஆங்?  கட்சி பெயர் என்ன?
தேசீய கேனையர் முன்னேற்றக் கட்சி.  (தே.கே.மு.க.)

எப்படிங்க இது? உலக அளவுன்றீங்க‌, தேசீய கட்சின்றீங்க?
உலக அளவில் தொடங்கப்பட்ட தேசீய கட்சி.

என்னாத்துக்கு இந்த கட்சி?
எம்புட்டு செய்தி பார்க்கிறோம்?  அரசியற்கலைஞர்கள் (அதாவது அரசியல் கலையுலகம்  ரெண்டு சேற்றுலயும் காலை வச்சு காசு பண்றவங்க) அறிக்கை கொடுக்கிறாங்க: 

ஒருத்தர் முந்தாநேத்தைக்கு: சாதி இல்லை; நேத்தைக்கு: என் சாதிக் கட்சியோட தான் சேருவேன்; இன்னைக்கு: இ.க.பொ.கட்சியில சேந்துட்டேன். நாளைக்கு: சாதி இருக்குங்கிறது இல்லை.

இன்னொருத்தர் நேத்தைக்கு: நானும் கட்சியும் ஒன்றுக்குள்ள ஒன்று.  இன்னைக்கு: நானே கட்சி. நாளைக்கு: நான் கட்சியிலிருந்து ராஜினாமா செஞ்சி 4 மாசமா ஆச்சே!

இவங்க மாதிரி நாமும் காசு பண்ண வேண்டாம்?  நாம என்ன ரெண்டு படம் எடுத்தோமா, திருட்டு ரயில் ஏறினோமா? கட்சியாவது தொடங்குவோமே!

எத்தனை தொகுதில ஜெயிப்பீங்க?
தோடா! இப்படி கேட்டீங்களே, நீங்களே ஒரு தொகுதிய எடுத்துக்கிடுங்க.  போஃபார்ஸ் பீரங்கிய அனுப்பிச்சி பிரசாரம் செய்திருவோம்.  தேர்தல் செலவு, அய்யாஆ ராசா செஞ்ச ஊழல்நிதியாமில்லே, அதுலேந்து கட்சிச் செலவுகளுக்குக் காசு எடுத்துக்கிடுங்க! உங்க கைக்காசை எங்க ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிருங்க. மறந்துர வேணாம்.


Wednesday, January 12, 2011

என் சில ட்வீட்கள் / நான் நல்லவள். நீங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும்!


.....சிவப்பில் தலைப்பு வகைகள், என் சில ட்வீட்டுகளின் தொகுப்பு  (வரலாறு முக்கியம்பா!)... கெக்கெபிக்குத்துவம்: 
பூமியின் காந்த துருவங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அப்போ என் magnetic personality என்ன ஆகும்!? #டவுட்டு

முட்டையை உடைக்காமல் விட்டால் சிக்கன் செய்யலாம். ஆனால், முட்டையும் சிக்கனும் டேஸ்டு ஒண்ணாயிருக்கறதில்லையாமே! #ரோசனை #டவுட்டு

(ஏன் சிக்கன் சாப்பிட்டதில்லையான்னு கேட்டவங்களுக்கு) இல்லை, தம் முயற்சியால் நகரக்கூடியவற்றை சாப்பிடாமல் விட்டு விடுவது என் வழக்கம்:)

இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அந்த வெளிப்படையான எண்ணங்களால் பூமியின் எடை கூடுமா? #ரோசனை #ட்வுட்டு

இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அவர்களின் வெளிப்படையான எண்ணங்களால், அவங்க மூளை காலியாவுதுன்னு தானே அர்த்தம்? #ரோசனை #ட்வுட்டு

எறுழ்வலி (=Hero): சொல்லி முடிக்கறதுக்குள்ள பல் எயிற்ற்ற்றுவலி. (வாத்திகள் கவனத்துக்கு: வலியில ஒற்று மிக்க்க்கியது)

அரசியல் கலக்காம தமிழச் சாதியில இருக்க முடியுமா?
குந்தவை/வந்தியத்தேவன், ராசராசன் அத்தோடு ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன் என்று என் Spectrumஇல் இன்றைக்கு ஒரே குழப்பக் காட்சிகள்.

திமுகவும் பாமகவும் ஒன்றுக்கொன்று கூட்டணிக்கான “சமிக்ஞைகள்” தெரிவித்துக்கொண்டன: கலைஞர். எந்த சானல்? சென்சார் செய்யப்படாமல் பாக்கலாமா?

காய்கறி மாலை, கருப்புச் சட்டை, கருப்பு சால்வையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் | திராவிடப் பெருமைகாக்க‌ வெங்காயம் கொண்டுவராததால்

உதய + நிதி = எழு + திரு = எழுந்திரு. எந்திரின்னு செல்லமா மந்திரிகள் கூப்பிடலாம்:-)

எளக்கியவியாதி
@writerpayon புத்தகம் வெளிவந்த பின்: வாசகர் கடிதம், புத்தகங்கள் மறுபதிப்பு கவலை பதிவு என்று எழுத்தாளனுக்கும் கடமைகள் உண்டு. @aayilyan

@iamkarki என்று சாருவின் இரண்டு காதுகளிலும் ”வைரம்” ஜொலிக்கிறதோ அன்றுவரை தமிழ்ச்சமூகம், எழுத்தாளனை மதிக்காத சமூகம் #சாரு_பிழியாதது

//சீரோ டிகிரி பத்து வருடங்களாக பதிப்பில் இல்லாமல் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வாசகர்கள் எங்கே போனார்கள்? // நோ கமென்ட்ஸ். #சாரு

@vNattu அதானே, பசி, நோவுன்னெல்லாம் பணத்தை வேஸ்டு பண்றாங்க சார், பேசாம புக்கு வாங்கலாம்

ஆஹா, சமகால புத்தகங்களை அரசே வாங்கி இலவசமாகக் கொடுக்க‌ வேண்டும். #மணிக்கு_2000_ரூபாய்_புத்தக_கண்காட்சி_கோல் #சாரு_பிழியாதது

//ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு புத்தகம் விற்கிறது// சேச்சே, அது எனக்கு ஒரு மணிநேர ஆட்டோ செலவு #சாரு_பிழிந்த‌து

உலகச் செய்திகள் பத்தி என் உயர்ந்த கருத்துக்கலக்கல்:-)
நித்யானந்தா அடுத்த இன்னிங்ஸுக்கு தயார் போல! மிகப்பெரிய தொகையிலிருந்து, பெரிய தொகைக்கு செட்டில் செய்திருப்பார்கள்!

உலகாயதம்: கடோசியில உரிச்சும் ஒண்ணுமில்லாம (அரசு) மாமாவே வச்ச ஆப்புன்னு புரிஞ்சு போகும்னு பேசிக்கிறாங்கப்பா. #விக்கிலீக்ஸ்

ஏர் இந்தியா: கோ பைலட்டின் அஜாக்கிரதையில் 37000 அடியிலிருந்து ப்ளேன் விழ, பாத்ரூம் சென்ற பைலட் அவசரமாய்.... http://t.co/JVegoop via @cnn

ஸ்வீடிஷ் பறவைகளைக் கொன்றது அமெரிக்க ராணுவத்தின் "அரூப" பறக்கும் ஊர்திகளா? http://www.bbc.co.uk/news/world-europe-12130940

இல்லை, அந்த பறவைகள் ஸ்வீடிஷ் வார்த்தைகள் பேச முடியாமல் விக்கித்து மரணித்தனவா?

தொழில்நுட்பச் செய்திகள் பற்றிய என் குறும் ஆய்வு
Is this THE hell? :-) | NASA spots tiny Earth-like planet, too hot for life - Yahoo! News http://yhoo.it/hb7ELa

Possibilities! Whole Mahabharata in small bag in fridge! Hong Kong researchers store data in bacteria - Yahoo! News http://yhoo.it/hUJLkr

How Stuxnet cyber weapon targeted Iran nuclear plant http://t.co/YTZA5SQ via @AddThis - அரசியல் சைபர் க்ரைம் நாவல் போலிருக்கு!

தென் துருவத்தில் மறைந்திருக்கும், உலகத்தின் நீளமான‌ டெலஸ்கோப்பின் பின்னிருக்கும் சதி http://goo.gl/EO2Lf :-))))

ஸ்டீஃபன் ஹாகிங் சென்ற சில வருடங்களில் அந்த கருத்தை மாற்றிக் கொண்டார். கரு>கரி என்று மாடர்னா சொல்லிக்கலாம்...

மற்றவர் கீச்சியதை நான் மறுகீச்சியது (ட்வீட் = கீச்சு!)
RT @SalmaanTaseer I was under huge pressure sure 2 cow down b4 rightest pressure on blasphemy.Refused. Even if I'm the last man standing

RT @hellooooonewman @GivThaDrummaSum Do you ever get down on your knees and thank God you know me and have access to my dementia?

RT @samugam A positive attitude may not solve all your problems, but it will annoy enough people to make it worth the effort.

RT @YourAuntLola Sweetie, having a man might boost your self-confidence, but so will half a martini & money in the bank

ட்வீட்டர் பற்றிய என் பழைய அறிமுகம்: http://kekkepikkuni.blogspot.com/2008/03/blog-post.html

Monday, January 10, 2011

பதிவர் சீமாச்சுவுக்கு பதில்: ராசா! இந்தியாவுக்கு என்னாபா நட்டம்?

சுடச்சுட பதிவர் சீமாச்சு "110. முன்னாள் அமைச்சர் ராசாவால் நமக்கு நஷ்டமா?" பதிவுக்கு  பதில் கொடுக்கணும்னு இங்கே:

இரண்டு துப்பு இருக்கிறது. ஒவ்வொரு விடியோவையும் முழுக்கப் பார்த்து விடுங்கள்.  ஒவ்வொன்றிலும் துப்பு ஒளிந்திருக்கிறது.

முதல்ல:

இரண்டாவது:

 



நான் பதிவர் சீமாச்சு கிட்ட கேட்டது முன்னாள் அமைச்சர் ராசா மட்டுமே நஷ்டம் ஏற்படுத்தலை, உங்க படிப்புக்கு ஏற்றாற்போல் விரிவாக விளக்கமா பதிவு போடக் கூடாதான்னு. அவர் அப்படிப் போட்டேன்னு சொல்லி எழுதிய பதிவுல ஏகப்பட்ட பெண் ஃபோட்டோக்கள்.

பொம்பளங்க படம் போட்டு பதிவு ஹிட்ஸ் வளர்க்கிற யாரும் விஷால் மாதிரியோ, சூர்யா மாதிரியோ படம் போடறது இல்லீல்ல, அப்புறம் என்ன?  சரி ஒரு பதிவு முழுக்க இவங்க ரெண்டு பேர் விடியோ போட்டுட்டு போறேன்.

"இந்தியா முன்னேறி விடும், ஊழல் ஒழிய வேண்டும் என்ற சராசரிக்கு மேற்பட்ட குடிமகனின் தாகம், உழைக்காமல் அனைவரும் அறிந்த தகவல் கொடுத்து,  நடிகை படம் போட்டதில் ஈடேறும்".

சரி, சரி, இந்த விளையாட்டை இன்னும் வளர்த்த விருப்பமில்ல‌, வீட்டுல பிழைப்பைப் பாக்கணும், பிள்ளங்களைப் படிக்க வைக்கணும். அப்புறம் பார்க்கலாம்.

எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

Monday, January 03, 2011

ஏன் இந்த மாற்றம்? எப்ப இந்த மாற்றம்?

என்னையும் தொடர் எழுத அழைத்ததுக்கு நன்றி:  பலே பாண்டியா


முதல்ல கொஞ்சம் கொசுவத்தி:
சின்ன வயசில பள்ளிக்கோடம் போக மாட்டேன்னு ரொம்ப அழும்பு பண்ணுவேனாம்.  பள்ளிக்குப் போனாலும் அங்கே எல்லோரையும் அடிச்சுத் துவைச்சிடுவேன் (நல்லா நினைவு இருக்கு, விவரம் கேட்டுராதீங்க).  தினமும் ரெண்டாப்பு வரைக்கும் நான் பள்ளிக்கே போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்கேன். எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் எங்கிட்ட பயம் (ஹிஹி). அவங்க ஒரு போலீஸ் உறவினர் கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணினதிலே, அவர் தான் என்னை "கோணி சாக்குல போட்டு உன்னை ஸ்கூலுக்குக் கொண்டு போகட்டுமா?" என்று கேட்டது இன்னும் நினைவில் இருக்கு.  அன்று தொடங்கியது, இன்னைக்கும், ஸ்கூல் பக்கம் போகும் போதெல்லாம் ஒரு பயம்:-)

மூணாப்புல ஊர் மாறினோம். எனக்கு புது பள்ளிக் கூடத்தில டெஸ்ட் வச்சாங்க.  எனக்கு அப்ப தமிழ் எழுத்துக்கள்ல உயிர்மெய் எழுத்துக்கள் இன்னும் தெரிந்திருக்கலை (ஹிஹி). ரகசியமா விஜயா எனக்கு உயிர்மெய் சொல்லிக் கொடுத்தது! (ஹிஹி).

மூணாப்புல தொடங்கி பள்ளி இறுதி வரை நல்லாப் படிச்சேன் - எப்படின்னு கேட்காதீங்க, அந்த கோணிச் சாக்கைக் காட்டித் தான் எனக்கு "சாக்கு சொல்ல" முடியும்.  கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கறதிலயும் அப்ப தான் ஆர்வம் நிறைய வந்தது. நாடகம் போட்டிருக்கேன். சொந்தமா நாடகம் எழுதி, அதுக்கு மேடை அமைப்புல ரொம்பவே எனக்கு ஆர்வம் இருந்தது... விளையாட்டுகள்ல அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும், கூடைப்பந்து / பூப்பந்துல ஆர்வம் காட்டிய போது என் ஜாதிப் பெயர் சொல்லி "படிக்கப் போடி!"ன்னு சொல்லிடுவாங்க. நிசமா!:-(

கல்லூரி வந்தப்புறம், இன்னவோ தெரியல, ஆம்பளப் பசங்க காலேஜில இருந்ததில, (ஹிஹி) நான் அடக்கி வாசிச்சேன்.... வம்புல மாட்டினேனா இல்லியான்னு யாருக்கும் தெரியாத அளவு அடக்கி வாசிச்சேன்:-) இவ்வளவு நல்ல பெண்ணா வளந்திருக்கேன்!

எனக்கு இன்னிக்கு ரெண்டு புள்ளங்க. சின்னது கொஞ்சம் என்னைப் போல பள்ளிக்குப் போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்குது, ஆனால், பள்ளிக்கூடம் போனவுடனே, எம் புள்ளைங்க‌ நல்லா மத்த புள்ளங்களோட விளையாடிட்டு என்னைய அழ வச்சிடுங்க!

எம் புள்ளைங்க‌ அமெரிக்கப் பள்ளிகளில படிக்கிறதுனால, கல்வி முறை முழுக்கவே மாறியிருக்கு. எல்லா பாடங்களிலும் ஏன் எதுக்குன்னு கேட்கிறாங்க.  நம் கலாசாரத்தை, இதிகாசங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது, வரலாற்று / அறிவியல் பூர்வமா சொல்ல வேண்டியிருக்கு. இராமன் இலங்கைக்குக் கடலைத் தாண்டுவதற்கு முன் "சமுத்திர ராஜனை வற்ற வைத்து விடுவேன்"னு சொன்னதுக்கு ஒரு நாள் முழுக்க "வற்ற வைக்க முடியுமா", "வற்றினா, மிருக, மீன் இனங்களுக்கு என்ன ஆகும்" என்றெல்லாம் எதிர்வாதம்.  எனவே இப்போதைக்கு எம் புள்ளைங்களுக்கு நான் சொல்வது "உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது எது, ஏன்னு சொல்லிடுங்க, அதைப் பற்றி நல்லா கற்றுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்" என்பது தான்.

இடையில் இன்னும் ஒரு சின்ன கொசுவத்தி: என் தந்தை கிரகணங்கள் பற்றி, செடிகொடிகள் பற்றி அறிவுபூர்வமாக விளக்கியவர். என்னிடம், "மது, மாமிசம் வேணுமா வேண்டாமான்னு நீயே தீர்மானிச்சுக்கோ" என்றவர்...
நல்ல வேளையா அவர் கொடுத்த தைரியத்துல இந்த புள்ளங்களை மேய்க்கிறேன்.

அமெரிக்கப் பல்கலையில் படித்திருக்கேன். பல கண்டங்களிலும் படித்தவர்களுடன் பழகியிருக்கேன், நட்பு பாராட்டியிருக்கேன். இந்தியாவில என் உறவினர்களின் குழந்தைகள் படிக்கிறதைப் பார்க்கிறேன்.  கடந்த பத்து வருடங்களில் அந்த குழந்தைகள் கல்லூரிகளில் நுழைவதையும், வேலை பெற்று வாழ்வில் உயர்வதையும் பார்க்கிறதுல எனக்குத் தெரிந்து தெளிந்தது என்னவென்றால் :

அப்பா அம்மாவின் முழு ஆதரவும்.. அது கிடைக்கலீன்னா கூட சொந்தச் செலவில தெளிந்த மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில நல்லாத் தான் இருக்காங்க.  "படி, படி"ன்னு சொல்லாமல், எதுக்குப் படிக்கணும்னு தெளிந்து படிக்கிறவர்கள் வாழ்க்கை முழுக்க ஏதோ ஒரு வகையில வெற்றி பெற்றுக் கொண்டே இருக்காங்க.  அதுக்காக, நானும் இந்த வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் வகையான்னு கேட்டுடாதீங்க‌.  எனக்கு இந்தத் தெளிவு இப்பத் தான் வந்திருக்கு, ஸோ, நான் இந்த வகையில இல்லைப்பா!

அமெரிக்கர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் படிப்பும், இந்தியக் குடும்பங்களின் கூட்டுறவு/அதீத உழைப்பு இவை கண்ணை உறுத்துகின்றன என்று படிக்கிறேன். அமெரிக்கர்கள் சிலர் வாயை விட்டுச் சொல்றாங்க.  அமெரிக்காவின் எதிர்காலம், இந்தியாவில் வசிக்கும்/படிக்கும் இந்தியர்களால் மாற்றி அமைக்கப்படுமோன்னு ஒரு அச்சம் இருக்கு.

ஆனால், அடிப்படை வசதிகள் (உணவு/நீர், இடம், போன்ற வசதிகள்) இந்தியர்களுக்கு எளிதில் கிடைக்கும் போதும், இந்தியாவில் படித்தவர்களின் விழுக்காடு அதிகமாகும் (அதாவது, மொத்த மக்கள்தொகையில் படிச்சவங்க எம்புட்டு என்கிற விகிதம்) போதும் தான் இந்தியா உலக அளவில் மாற்றம் ஏற்பட வைக்க முடியும்.  படிச்சவங்க / தெளிஞ்சவங்க‌ அதிகமாகும் போது, அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது மனித உரிமைன்னு குடிமக்கள் எல்லோரும் புரிந்து கொள்வாங்க.

அடிப்படை வசதி கிடைக்காத போது போராடக் கொஞ்சமாவது பரந்தறிவு (பட்டறிவு அல்லது படிப்பறிவு) வேணும். இதற்கப்புறமே, ஏழ்மை, சுரண்டல் இவை சமச்சீர் அடைந்து.... ஸ்ஸப்ப்பா, மூச்சு வாங்கிக்கிறேன்.... கவனிங்க, ஏழ்மையும் சுரண்டலும் முழுசா அழியாதவை; சமச்சீர் அடையும் அவ்வளவு தான்!  எனவே, சும்மா வீட்ல படின்னு சொல்றாங்களேன்னு படிக்காமல், தெளிவோடு படிக்கிறவங்க இந்தியாவிலேயே அடிப்படைக் கட்டமைப்பை உயர்வடைய வைக்கும் போது தான் உண்மையான மாற்றம் ஏற்படும்!

ஆமினா, பலே பாண்டியா எழுதிய பதிவுகளின் தாக்கத்தில "எனக்குத் தோணியதை" எழுதினேன். உங்க கருத்து என்னன்னு சொல்லிட்டுப் போங்க.  நானும் தெளிஞ்சிக்கிறேன்!