COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, October 20, 2008

இட்லி வடையின் பலமுகங்கள் - என் ஊகம்

இட்லிவடையை தமிழ் கூறும் உலகம் நன்கறியும். ஆனால், ஒரிஜினலாய் அவர்கள் படம் பார்த்திருப்போமா? நீங்கள் பார்ப்பதற்காய் என் ஊகங்கள் இங்கே க்ரூப் படமாய் இணைத்திருக்கிறேன்.



வீட்டில் மல்லிகைப்பூப் போல் இட்லி செய்தாலும், காஞ்சீபுரம் இட்லி, கன்னட தட்டு இட்லி என்று பலவகையும் எனக்குப் பிடிக்கும். காஞ்சீபுரத்து இட்லியும் சரி, ஒப்பிலியப்பன் கோயிலில் கிடைக்கும் இட்லியும் சரி தனி டேஸ்டு தான். கர்நாடக தட்டு இட்லி (படம் காண்க) அளவில் பெரிது, ஆனால், மாவு அஃதே (என்று சொல்கிறார்கள்).

வடைக்கு உளுந்து வடை தான் எங்கள் வீட்டில் பிரியம். உழுந்து என்று சிலர் எழுதினாலும்:-( ஹோலி வடை என்று என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால், இட்லி வடை எதுவானாலும், நாவு நீண்ட எம் குடும்பத்தினருக்கு சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி எல்லாம் வேணும்னு சொல்லுவாங்க.

இத்தனையும் சொல்லிட்டு, என் ஊகத்தைச் சொல்லாம எப்படிப் போவது? கிழக்குப் பதியாமல், பாராமல், பாலாய் இருக்கிறதே... இன்னும் பல இருந்தாலும், மாவு புளிப்பதை கண் பார்ப்பதில்லை. அப்படியே இருந்தால் நலமே!

Friday, October 17, 2008

சினிமாய ஜாலம்

என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு. வெள்ளிவிழா கொண்டாட அவுக வாரேன், இவுக வாரேன்னு சொன்னதுக்கெல்லாம் வேண்டாம்னுட்டோம்ல!! வருசத்துக்கு ரெண்டு பதிவு, மூணு பதிவுன்னு ரெண்டு வருசமா ஒப்பேத்திட்டிருக்கேன் (எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு தெனைக்கும் போறாரு... கான்டீன் காபி குடிக்க).

இப்ப செமத்தியா மாட்டினேன். ராதா ஸ்ரீராம் என்னை திரைப்பட இடியாப்பத்தில் சிக்கிவிட்டு விட்டார்கள். என் பதினைந்து வயதுக்குள் மொத்தமே ஆறேழு படங்கள் பார்த்திருப்பேன். அவ்வளவு தான். என் அம்மா வழிச் சொந்தத்தில் ஒருவர் வீட்டுக்கு விடுமுறைக்குப் போனபோது, இரவுக் காட்சி ("கி"ந்திப் படம்) அவர்கள் கூட்டிச் சென்ற போது பார்த்ததுக்கே, "தே.#.யா பொண்ணுங்க தான் இரவுக் காட்சி பாக்கும்"னு அப்பாவிடமிருந்து வசவு விழுந்ததாக அம்மா சொன்னார் (ஏம்மா சொன்னீங்க?) அப்பாவைக் கேட்க வேண்டிய கேள்விகள் கேட்டாச்சு. அதுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை. அதே போல், "முளை விட்டாச்சு. என்னை காப்பாத்திக்க எனக்குத் தெரியும்"னு படி தாண்டி தனியாவே (கையில் அரை ப்ளேடு வச்சுகிட்டு) நிறைய படங்கள் அப்புறம் பார்த்துருக்கேன் (அர்த் சத்யா, தெ மேன் ஹூ ந்யூ டூ மச்... லாரல் ஹார்டி - இதுக்கு ப்ளேடு தேவையில்லை:-). இது தான் என் சினிமா பில்டப்.

1). எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எப்பப் பார்த்தேன்னு தெரியாது. நாலு வயதில், "அந்த ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்றாங்க" என்று அவர்கள் மரத்தைச் சுற்றி பாடியதற்காக, பறைசாற்றியிருக்கிறேன். என் ஜீனியஸ் புத்தியை:-) புரிந்து கொள்ளாத நம் ஊரார் கேலி செய்திருக்கிறார்கள். நாலு வயதுக்குள் ஓரிரண்டு படம் பார்த்திருக்கலாம். எங்கம்மாவுக்கு என்ன படம் பாத்தோம்னு நினைவில்லை.
நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்: என் க்ளாஸ்ல, பாக்கறதுக்கே செவப்பா, நல்லா படிக்கிற பொண்ணு, அவளை மாதிரி நானும் நல்லா படிக்கணும்கற முடிவுல் இருந்த காலம். அவள் எம்ஜியார் பக்தை. அது சொல்லிச் சொல்லி நானும் ஒரு எம்ஜியார் படம் பார்க்கணும்னு முடிவு செய்து, அப்பாவை கன்வின்ஸ் செய்து, "நாளை நமதே" போனது நினைவில் இருக்கிறது. ஓரளவுக்கு மூணு வேடம்னு புரிந்தாலும், நமக்குக் குடும்பப் பாட்டு இல்லியேன்னு கவலை படும் அளவுக்கு நான் சின்னவள் இல்லை அப்ப. ஏன், எதுக்குன்னு நிறைய கேள்வி கேட்டேன்னு சொல்லுவாங்க. கட்டாயம் மூட்டைப் பூச்சிகளை உணர்ந்தேன். எம்ஜியார் படத்தில் ஒன்றும் இல்லை என்றும். அதுக்கப்புறம் ஒரு எம்ஜியார் படமும் (துட்டு கொடுத்து) பார்த்ததில்லை.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன்:( பசுபதியோட ரசிகை நான். அது வரைக்கும் படம் ஓக்கே. டாலர் கொடுத்து ரஜினியோட வெத்து பிட் படம் பாக்குற அளவு நான் ரஜினி சார் ரசிகை இல்லை.

3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம் - முழுசா பார்க்கலை. தொண்டையில், கோலி சோடாவின் கோலி சிக்கியதாய். மீன் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால். எனக்கு உள்ள பெரிய கஷ்டம், எனக்குப் பிடித்தவர்கள் முட்டாள்தனமான வேலை செய்தால் ஒக்காந்து பாக்க முடியாது. நானும்
இரைந்து திட்டி எங்கூட ஒக்காந்திருக்கவங்கள் எல்லாம் ஓட வைச்சிடுவேன். கமல் சார் கோட்டையை விட்டுட்டார், இனிமே ரூட் மாத்த மாட்டார்னு இந்த படம் பார்த்து புரிந்தது (நான் ஒரு ட்யூப் லைட் :-(

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
குணா. (அய்! அய்யனார் ஆயிட்டோம்லா!)
மகாநதி, மில்லியன் டாலர் கொடுத்தாலும் அந்த படம் திரும்பிப் பாக்க மாட்டேன் (நீங்க யாரச்சும் கொடுங்க, அப்ப திரும்பி யோசிக்கிறேன்). “அந்த நாள்” விமர்சனம் படித்ததிலிருந்து பாக்கணும்னு தோணுது.

5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
ஆட்டோ ஹோல்ஸேல் கம்பெனி நடத்தறீங்களா?

அரசியல் உணர்வு அதிகமாக உணர்ந்திருக்கிறேன். கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா என்று நம் தலைமுறை முதலமைச்சர்கள் எல்லாரும் திரை/நாடகப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள். ஏன் கலைஞர்/ அண்ணா பெரியாரிடமிருந்து பிரிந்தார், எம்ஜியார்/ஜெ. அரசியல் நாடகங்களுக்கு அர்த்தங்கள் புரிந்தே வளர்ந்தேன். இப்ப சத்யராஜ், ரஜினிக்கு முன்னால் நடிகர் சங்க நாடகத்தில், பேசுவதையும் பார்க்கிறோம். அவிங்க எல்லாரும் நம்மள என்னான்னு நினைச்சிட்டிருக்காங்க?

5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
ஹ்ம், எனக்கு எடிட்டிங்ல ஈடுபாடு உண்டு. அதுக்காக தமிழ்ல படங்கள் ஊன்றிப் பார்ப்பேன்... ஆனா பொதுவா இன்னிக்கு(ம்) தொழில்நுட்பம் மேல்நாடு சார்ந்து இருப்பதாக தோன்றுகிறது...
எனக்கு இன்னிக்கும் பிடித்தது (கடோத்கஜன் ஸ்டைலில் வாயப் பொளந்துகிட்டுல்லா பார்ப்போம், அவர் வாய்ல லட்டு எப்படிப் போவுதுன்னு. அவரு உடல் பெரிசாக பெரிசாக, பாத்திரங்கள் சிறிசாத் "தோணும்". அந்த ஷாட்களுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க! அப்படி கஷ்டப்பட்ட "சின்ன மனுஷங்களுக்கு" இந்த் பதிவு சமர்ப்பணம்):


6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
உண்டு & இல்லை. எல்லா கிசுகிசு படித்தாலும், இப்ப விகடன்ல மக்கள் பின்னூட்டத்தோடு படிப்பது தான் படு சுவாரசியம். எல்லாத்தையும் பொளந்து வச்சிடுறாங்க.

குமுதத்தில் நம்மூர் ஹாலிவுட்டார் தொடராய் எழுதியதை விரும்பிப் படித்தேன்.

7) தமிழ்ச்சினிமா இசை?
கேட்பேன். ரங்கு, நண்டு, சுண்டு எல்லாம் பீட்டரு பாட்டு தான்:-( நான் வாணி ஜெயராம் குரலின் அடிமை. ஹிந்தி, தமிழ்னு எல்லாம் கேட்பேன். யாரையும் குறிப்பா தமிழ் இசையமைப்பாளர் பிடிக்கும்னு இல்லை.
எனக்குக் கடந்த இரு வருடங்களாகப் பிடித்த்த்த்த்த்த்த்த்த பாடல், தேன் குரலழகி மும்பை ஜெயஸ்ரீயின் குரலில் (இதுக்கு மேல பொம்பளங்க காதலை அழகாச் சொல்ல முடியுமா?)

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
உண்டு. இந்தியாவில் இருந்த போது தூர்தர்ஷன் டிவில மதியம் வரும் வேற்று மொழிப் படங்களில் தொடங்கியது (ரே, மற்றும் இந்திய கிழக்கத்தியப் படங்கள் பொதுவாகப் பிடித்தன) என் அறிவுத் தாகம் (ஹய்யோ!)

தமிழ்ப்பதிவர்களில் எத்தனை பேர் பெண்கள், சிறு குழந்தைகளின் தாயாய், வேலை பார்க்கிற பெண்ணாய் இருப்பவர்கள் அவர்களுக்கு மட்டுமே இது புரியும்: நேரம் இல்லை:-( "சென்ட் ஆஃப் அ உமன்" பார்த்து சிக்னலில் நிற்காமல் போய் போலிஸிடம் மாட்டியிருக்கிறேன். ஒஸாமா பார்த்திருக்கிறேன். இன்னும் பல படங்கள் உண்டு என்றாலும், ஹிஹி, "மை கஸின் வின்னி" வசனம் வரிவரியாக ஒப்பிப்பேன். (நம்ம காரக்டர் ஃப்ளா அது).

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
துட்டு கொடுத்து படம் பார்த்துட்றோம் இல்ல? அது தான் தொடர்பு. என் தந்தை வழி உறவினர் இருவர்(!) அந்த/இந்த கால படங்களில் கதை/வசன கர்த்தாக்கள். அவர்களுக்கு என்னைத் தெரியாது என்பதால், வுட்டுடறேன்.

10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்னிக்குமே, சுஜாதா, ஜெயகாந்தன், ராஜேஷ்குமார்/சாரு, ஜெமோ, பொ. கருணாகரமூர்த்தின்னு பலதரத்தையும் படிக்கிற மாதிரி, தமிழ்ல சினிமால எல்லாரும் இருக்காங்க. வளர்ச்சி இருக்கும்னு கண்டிப்பா நம்புகிறேன். கார்ப்பரேட் தயாரிப்பாளர்களை சினிமா ஜீரணிச்சப்புறம் ஸீ! சேஞ்! (பன் இன்டென்டட்).

10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தயவு செய்து இதை நடைமுறைக்குள்ளாக்கினால், நம் குழந்தைகளின் நன்றிக்குரியவர்களாவீர்கள். இந்த டிவி சனியனையும்.