COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, November 09, 2007

நட்பில் ஒரு கண்ணாமூச்சி....

அறுந்து போன கம்பிகளின் நாதமாய்
நம்முள்ளே மௌனம் மீட்டும் ஓசை.....
உள்ளின் வேகத்தைக் காட்ட அறியாமல்
நுரையாய்த் தெளித்து கரையும் வார்த்தைகள்...
நேற்றைய மழையில் நனைந்து போன
காய்ந்த-சருகின் அவலமாய்ப் போன உறவு...
கட்டிய கூட்டின் மேல் அடித்த காற்றைச்
சொல்லிக் கரையும் குருவியாய் நெஞ்சம்.
இதில் யாரைச் சொல்ல?

புள்ளியால் தான் வருவது கோலமென்றால்,
நூலால் தான் இழைவது கம்பளமென்றால்,
எத்தனை புள்ளிகளை அழித்துத் திரும்பிப் போடுவேன்?
எத்தனை நூல்களைக் கலைக்க வேண்டும்!?

சிலந்தி வலையாய் நம்மைச் சுற்றிப் போட்டுக் கொண்டு,
அதிலேயே விட்டில்களாய் நாமே!
கடலினலை ஓயாதென அறிந்தும் இந்த விளையாட்டு...

No comments: