COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, November 19, 2007

மிகப் பீழை....

யாருமே இல்லியா?

திருமணமான அவள் தன்னுடைய பழைய புகைப்படத்தை வாங்கிக் கொள்வதற்காக இன்றைக்கு யாரோவான அவனைச் சந்திக்க வந்தாள். அவனையும் அவளையும் ஆறேழு நாய்கள் காரில் தூக்கிப் போய் துவம்சம் செய்தன. அவனுக்கு அடி. அவள் அவள் என்பதால் வன்கொடுமை. இதனால் அவளுக்கு தண்டனை. இதைப் பற்றி அவள் ஊடகங்களிடம் பேசியதால் இப்போது அவளுக்கு 200 கசையடியாக தண்டனை உயர்த்தப் பட்டிருக்கிறது.

எதைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். தெரியாதவர்கள் தலையை அதே பொந்தில் நுழைத்துக் கொள்ளலாம்.

இதற்குக் காரணங்கள் பல சொல்கிறார்கள். திருமணமானவள் தனக்குச் சொந்தமில்லாத ஒருவனைச் சந்திக்க வந்தது; ஊடகங்களிடம் பேசியது; அதைத் தவிர ஈனப் பிறவிகள் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் - இவளும் அவனும் ஷியா. இவளுடைய வழக்குரைஞரும் ஷியாவாம்....

மக்களுக்காக வந்தது அன்புமார்க்கம். நம்மூரில் சாதிச் சங்கங்கள் போல், அவர்களூரில் அன்புமார்க்கம் மறந்து போனார்களா? அய்யோ!

No comments: