COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, February 06, 2009

பத்திரமாய் ஞாபகங்கள்

ஞாபகங்களின்
இழைகளில் என் அதிர்ச்சிகளும் பயங்களும்.
காணாமல் அடிக்கப்பட்ட
கனவுகளைக் கட்டிப்போட்டு
கதிர்/நிலா மின்னும் காவிரிவிழிகளில் புதைத்தாயிற்று.
சுழித்துப் போகிற நீரில்
தவித்து இறந்த தோழி/ழனின் கடைசிக்காட்சி
காணாமலே போகத்தான்
நான் ஞாபகங்களைக் கொன்று கொள்கிறேன்.
(ஏனெனில் அந்தத் தோழி/ழனும் நானேதான்).

மறவாது பிள்ளையார் சுழி போடாமல்
எழுதத் தொடங்கினாலும், மறந்து
நினைவுகளைக் கோர்த்து விடுகிறேன்.
புரிந்த கோடுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன
ஞாபகங்கள்.

அறிந்து கொன்ற அன்றில்களையும்
காற்பெருவிரலால் மடித்த தொட்டாற்சுருங்கிகளையும்,
தீப்பெட்டிகளுக்குள் தட்டான்பூச்சிகளோடு
(வைத்துக்கொள்கிறேன்)
பத்திரமாய், ஞாபகங்களின் இழைகளுக்கப்பால்
வெகு பத்திரமாய்.

No comments: