COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, February 04, 2009

கொழுப்பு?

குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கொணர
(ஓர் அமெரிக்க) ஹைவேயில் நான் அவசரத்தில்!
முன்னே டப்பா-காரில் ஒர் இந்திய இளைஞன்
புதிதாய் ஓட்டும் அச்சத்தில் மெதுமெதுமெதுமெதுவாய்....
எட்டிப்பார்த்தால், கோடம்பாக்கம் ஹைரோட்டில்
என் இருசக்கரவண்டியை
இடித்து எக்களித்தவன் நினைவு வர...
அவசரமாய் என் உயருந்தால் இடிப்பதுபோல் போய்
ஓவர்டேக்!

கடைசி இரண்டு வரிகள் மட்டும் "நிஜம்-போல்":-)

உயருந்து = SUV

9 comments:

Unknown said...

சேச்சே, நான் ரொம்ப நல்லவளாக்கும்:-)

ILA (a) இளா said...

உண்மையா அந்த மனுசன் பயந்தாரா?

துளசி கோபால் said...

நல்லவன்னு நம்பிட்டேன்.

ஆமா..... இது என்ன புரியலையே....

புதசெவி

//அவசரமாய் என் உயருந்தால் //
உயர் + உந்து

அல்லது உயிர் + உந்து

Unknown said...

இளா, வாங்க, வாங்க! நல்வரவாகுக!

பயந்தாரா, பின்ன?!! பயங்கரமா ஒரு பிரேக் போட்டுகிட்டார். (இன்னும் ரெண்டு வாரங் கழிச்சு என் வண்டி பாத்தாருன்னா, ஒரு ஸ்பீடு எடுப்பாரு பாருங்க:-)

இந்த அலப்பறையெல்லாம் நான் வண்டியோட்டும் போது தானே செய்ய முடியும்:-)

Unknown said...

துளசி, வாங்க வாங்க. “நல்லவ”ளின் கால் “நல்லவ”ங்களுக்கு தெரியாதா என்ன!

உயரமான உந்து:-) என்னுது ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வெஹிகிள். அவர் காம்பாக்டு காரை விட உயரமாக இருப்பதால்:-)

சென்னையில் நான் ஒரு ஜுஜுபி மோபட் வச்சிருந்தேன். அப்ப எல்லா வண்டியுமே என்னைவிட உயரமாயிருக்கும்! அது ஒரு கனாக்காலம்:-)

ramachandranusha(உஷா) said...

ஏம்பா, "பெண்ணீயம்" என்றுக் குறிச்சொல் தந்திருக்கலாம் இல்லே
:-)

Vijay said...

பாத்து...பாத்தூ.... நாங்களும் இதெல்லாம் நெறய.... பண்ணிட்டு இப்போ வண்டி எடுக்கணும்னாலே வெறுப்பா திரியறோம். எல்லாம் ஒரு ஜில்பான்ஸ்தான் இல்ல... என்சாய்......

Unknown said...

உஷா, வாங்க!! பெண் ஈயும்..ங்கறதெல்லாம் எனக்கு சான்ஸே இல்லை. பழிவாங்கல் மட்டுமே:-)

Unknown said...

விஜய், வாங்க!! உஷாக்கு சொன்னது தான் உங்களுக்கும்:-)

இந்த SUV 9 வருஷமா எங்ககிட்ட இருக்கு; நான் பொதுவா இந்த விளையாட்டு விளையாடறதில்லை. ஆனா, குறிப்பிட்ட ரோட்ல (”மாமா” இருக்கமாட்டாரு) இந்தியப் புதுவருகைகள் அதிகமாயிருக்கு; ரொம்ப ஸ்லோ பண்ணிடறாங்க. அதுல விளைஞ்சது இந்த கவுஜ/கொடும.

இதனால் அறியப்படுவது என்னவென்றால், நான் எவ்வளவு ஸ்லோவா இருந்தேன்னு சௌகரியமா மறந்து போச்சு:-)